அனைவருக்கும் வணக்கம்
மாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது

Wednesday, July 7, 2010

*1-1-07க்குப் பின்னர் ஓய்வு பெற்றவரின் நிலுவை மற்றும் லீவ் சாலரி போன்றவற்றை காலதாமதமின்றி வழங்கிட மாநில நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளோம். மாவட்ட செயலர்கள் உதவிட வேண்டுகிறோம்

* கட்டிடம் எழுந்து வருகிறது. ஆக 15 வரை புரவலர் நிதி வரவேற்கப்படுகிறது. புரவலர்கள் பெயர்கள் நிரந்தரமாக நமது கட்டிடத்தில் நிலைபெறும். தேவையெல்லாம் 8 லட்சம் மட்டுமே. முயன்றால் சாத்தியமே. நம்மால் இயலாத எதையும் நாம் நிகழ்ச்சி நிரலில் ஏற்றுவதில்லை.

* விருதுநகரில் நமது தோழர் சுகுமார் காண்ட்ராக்ட் காலிகளால் தாக்கப்பட்ட அருவருப்பான நிகழ்வு நடந்துள்ளது. நமது மாவட்ட சங்கம் மற்ற சங்கங்களையும் இணைத்து நியாயம் கேட்டு போராடி வருகிறது.விருதுநகரில் காண்ட்ராக்ட் கும்பல் நமது அலுவலகத்தில் பெறும் ராஜமரியாதைகளை மாநில நிர்வாகத்திடம் கவனப் படுத்தியுள்ளோம். உரிய நடவடிக்கைக்கு வற்புறுத்தியுள்ளோம்

Thursday, July 1, 2010