அனைவருக்கும் வணக்கம்
மாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது

Sunday, December 25, 2011

நன்றி-தமிழ்மரபு

திரு வீ. க எவன் ஒருவன் தான் வாழ்ந்த காலத்தில் தன்னலம் கருதாது தன் மொழியை, தன் மக்களை, தன் கலையை அல்லது தன் கலாச்சாரத்தை தன் தோளிலேற்றிச் சற்றாவது உயர்த்துகிறானோ அல்லது உயர்த்த உண்மையிலேயே எத்தனிக்கின்றானோ, அவன் வாழ்க்கை வரலாறு ஆகிறது. அத்தகைய வரலாறு படைத்த இப்பெரியோர்கள் தமிழகத்தில் அதிகம் கற்றோராலேயே கூடப் பெரிதும் பேசப்படாதிருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு., தமிழர்களின் வெட்கக்கேடு. பகட்டுக்கும், பசப்பிற்கும், பாசாங்கிற்கும் தமிழன் பறிபோவதும், பலியாவதும் அவன் தலையெழுத்தோ என்று கூட சில சமயம் எண்ணத் தோன்றுகிறது. வங்காளத்தில் தாகூரைப் பற்றித் தெரியாதவர்கள், கேரளத்தில் வள்ளத்தோளை அறியாதவர்கள் மிகக் குறைவானவர்களே. ஆனால், தமிழகத்தில் பாரதியைப் பற்றி சரியாக அறியாதவர்கள், அவர் பாடல்களில் ஒன்றைக் கூட முழுதும் படிக்காதவர்கள் அதிகம்! திருவள்ளுவரைப் பற்றி சரியாகத் தெரியாதவர்கள், ஒரு திருக்குறளாவது முழுமையாகத் தெரியாதவர்கள் மிக அதிகம்! நான் சொல்வது மெத்தப் படித்தவர்களையும் சேர்த்துத்தான்! இந்நிலையில், இந்தப் பட்டியலிலேக் காணப்படும் தமிழ்ப் பெரியோர்கள் பெரும்பாலோர் அதிகம் அறியப்படாமல் அல்லது பேசப்படாமல் இருப்பதில் என்ன வியப்பு இருக்கமுடியும்? ஆனால், பட்டியலில் காணப்படும் இந்தப் பெரியோர்கள் எல்லோரும் மாரியை ஒத்தவர்கள். பயன் கருதாது, தன்னலமின்றி, தன்னைத்தானே வருத்திக்கொண்டு, காரியமே கண்ணாகி இருந்து, தமிழ்த் தொண்டு செய்தவர்கள்; அரும் படைப்புகளைத் தந்தவர்கள். பிற்காலத்திலே நாம் பேசப்படப் போகின்றோம், பாராட்டப்படப் போகின்றோம் என்றெல்லாம் கருதியொன்றும் அவர்கள் தங்கள் செயற்கரிய செயல்களை ஆற்றவில்லை. மூதுரையின்படி நல்லோரைப் பற்றி பேசுவதும், நல்லோர் குணங்கள் உரைப்பதும் நன்று என்று சொல்லலாம். அல்லது, திருக்குறள் வழி நின்று, பெரியோரைத் துணைக்கோடுவதால் ஏற்படக் கூடிய நன்மைகளை பட்டியலிடலாம். ஆனால், உண்மையில் இந்தத் தமிழிப் பெரியோர்களைப் பற்றி அறிந்துகொள்வதால், அவர்கள் ஆற்றியத் தொண்டைப் பற்றியும், அவர்களின் படைப்புகளைப் பற்றியும், அவர்கள் ஆற்றிய செயற்கரிய செயல்களைப் பற்றியும் தெரிந்துகொள்வதால், ஒரு புத்துணர்ச்சியும் ஒரு புதிய எழுச்சியும், நாமும் சாதிக்க வேண்டும், நம்மாலும் சாதிக்கமுடியும் என்ற எண்ணமும் உறுதியும் நம்முள் மிகும். நம்மை நாமே உள்நோக்கிப் பரிசோதித்துக்கொள்ள ஒரு உந்துதல் நமக்குக் கிடைக்கும். நம்மை நாமே உயர்த்திக்கொள்ள ஒரு உத்வேகம் பிறக்கும்.. இந்தப் பெரியோர்களிலும், தனக்கே உரிய தனித்தன்மையும், தனிச் சிறப்பும் உடையப் பெருந்தகைதான் தமிழ்த் தென்றல் திரு.வி.க. இவரும் பாரதியைப்போல் ஒரு பன்முகம் கொண்ட விந்தையாளர். பள்ளியாசிரியர், பத்திரிக்கை ஆசிரியர், தேசபக்தர், தேசத்தொண்டர், எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், தொழிற்சங்கத் தலைவர், வணிகக் கணக்காளர், வள்ளலாரைப்போல் சமரச சன்மார்க்கத்தில் ஈடுபாடு உடையவர், இயற்கை உபாசகர், சமூகச் சீர்திருத்தவாதி, பெண்கள் முன்னேற்றத்திற்காக் குரல் கொடுத்து, உழைத்து, சாதித்தும் காட்டியவர். தான் வாழ்ந்த காலத்தில், வசதியின்றி இருந்தாலும், வறுமையிலே உழன்றாலும், தன் புலமைக்காவும், நாவன்மைக்காகவும், தொண்டிற்காகவும் பெரிதும் மதிக்கப்பட்டவர்; போற்றப்பட்டவர். இவருடைய தனித்தன்மையிலும் ஒரு தனிச் சிறப்பென்னவென்றால், தமிழ் உரைநடைப் பாங்கில், மொழிநடையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் என்பதாகும். தமிழ் மொழியில் உரைநடைப் பாங்கை, வெகு எளிதாக, மிகச் சரியாக திரு.வி.க-விற்கு முன், திரு.வி.க-விற்குப் பின் என்று நாம் பிரித்துவிடலாம். அயல்மொழிகளின் நெடி வீச, நெடிய சொற்றொடர்களில், கடினமான, புரியாத, பண்டிதச் சொற்களைக் கொண்டு, உரைநடை எழுதப்பட்டு வந்தபோது, எளிய, இனிய தமிழ்ச் சொற்களைக்கொண்டு, சிறு சிறு சொற்றொடர்களை உருவாக்கி, அரிய பெரியக் கருத்துக்களை அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் எழுதிக் காட்டியவர் திரு.வி.க. பாரதியைப் பற்றிப் பேசும்போது, கவிதையைத் தேனாய், பாலாய், பாகாய், அமுதாய்க் கருதி வந்தக் காலத்தில், அதை மனிதனின் அன்றாட, அடிப்படைத் தேவையான குடிநீராய் ஆக்கியவன் என்று சொல்வார்கள். அதுபோலவே, திரு.வி.க தமிழ் உரைநடையைத் தூய, தெளிந்த, குளிர்ந்த, சுவையான குடிநீராய் ஆக்கிக் காட்டியவர் என்பது ஒரு பேருண்மை. தமிழ் மணம் கமழ அவர் உருவாக்கியச் சொற்றொடர்கள், குறியீடுகள், பயன்படுத்திய வார்த்தைகள் மற்றும் மொழிநடை பத்திரிக்கைத் துறையிலும், மற்ற துறைகளிலும் பின்பு பலராலும் பின்பற்றப்பட்டது. கண்ணதாசன், கல்கி போன்றவர்கள் 'திரு.வி.க-வின் உரைநடைப் பாங்கை அப்படியே நாங்கள் பின்பற்றினோம்,' என்று அவர்களே குறிப்பிட்டிருக்கின்றனர். எழுத்தாளர் வ.ரா. எழுதினார்: 'தூய தமிழின் இன்னிசை ஒலியைக் கேட்டு ரசிக்கும் எண்ணம் கொண்டவர்கள், திரு.வி.க நடத்தி வந்த 'தேசபக்தன்' இதழின் பழைய படிகளைக் கண்டெடுத்துப் படிப்பார்களேயானால், மனப்பூரிப்பு அடைவார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. தமிழில் உரைநடையில் ஒலியழகு, பொருளழகு, வர்ணனை அழகு உண்டோ என்பவர்கள் அவரின் எழுத்தைப் படித்தால் தெளிவார்கள்.' திரு.வி.க சென்னையை அடுத்த, போரூருக்கு அருகிலுள்ள துள்ளம் என்ற சிற்றூரில் 1883-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 26-ஆம் தேதி பிறந்தார். தந்தையார் பெயர் விருத்தாசலம்; தாயார் பெயர் சின்னம்மாள். கல்யாணசுந்தரம் என்று பெற்றோர்களால் பெயரிடப்பட்டார். மூதாதையர்களின் ஊரான திருவாரூரின் நினைவாக 'திருவாரூர்' அவர் பெயரில் இணைக்கப்பட்டது. எனவே, அவர் முழுப் பெயர் திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரம். சுருக்கமாக, 'திரு.வி.க.' அவர் பெயரில் வந்து ஒட்டிக்கொண்ட 'திரு' ஒரு அடைமொழியோ, விளிமொழியோ அல்லது அணிமொழியோ அல்ல. அது ஒரு வெறும் அடையாளமொழிதான். இருப்பினும், அவரிடம் இயற்கையிலே அமைந்திருந்தப் பேரறிவு என்னும் திருவாலும், அதைவிட மேலாக அவரிடமிருந்த மனிதநேயம் என்னும் பெரும் திருவாலும் அவர் பெயரில் வந்து ஒட்டிக்கொண்ட 'திரு' திருவடைந்தது., பெருமைக்குரியதாகியது. திருவள்ளுவரைப்போல! திண்ணைப் பாடமாக ஆரம்பக் கல்வியை தன் தந்தையிடமே கற்றார். கற்றது அரிச்சுவடி முதல் ஓரளவு ஆங்கிலம்வரை. பின்பு, சென்னை இராயப்பேட்டை ஆரியன் பிரைமரி பள்ளியில் இரண்டாம் வகுப்புத் தொடங்கி, வெஸ்லி கல்விச்சாலையில் நான்காம் படிவம் வரைப் படித்தார். படிப்பில் முதல் மாணாக்கனாக விளங்கினார். பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி முதலியவற்றில் கலந்துகொண்டு முதல் பரிசும் பெற்றார். உடல் பருமன் குறைய உட்கொண்ட ஒரு நாட்டு மருந்து, பத்திய முறிவின் காரணமாக ஒத்துக்கொள்ளாமல் போய், முடக்கு நோய்க்கு ஆளாகினார். அதனால், பள்ளிப் படிப்பு பாதியில் கெட்டது. புகழ் பெற்ற அயோத்திதாசப் பண்டிதரிடம் சித்த வைத்தியச் சிகிச்சைப் பெற்று, இரண்டாண்டுகளில் படிப்படியாகக் குணமானார். இதற்கிடையில், குடும்பமும் வறுமைக்கு ஆளானது; பெற்றோரும் நோய் வாய்ப்பட்டனர். நான்காண்டு இடைவெளிக்குப் பின் உடல் தேறிய திரு.வி.க மீண்டும் வெஸ்லி பள்ளியில் நான்காம் படிவத்தில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். தன் அறிவாலும் திறமையாலும் மீண்டும் படிப்பில் முதல் மாணாக்கனாக விளங்கினார். அவர் ஐந்தாம் படிவம் படிக்கும்போது அவரின் தமிழாசிரியாரக இருந்தவர் புகழ்பெற்ற யாழ்ப்பாணம் நா. கதிரைவேல் பிள்ளை. பள்ளி இறுதியாண்டு படிக்கும்போது, திரு.வி.க-விற்கு ஏனோ படிப்பில் ஆர்வம் குன்றத் தொடங்கியது. மேலும், ஒரு தேர்வு நாளன்று, தான் பெருமதிப்பு வைத்திருந்த கதிரைவேல் பிள்ளைமேல் தொடரப்பட்ட ஒரு வழக்கில் சான்று கூறச் சென்றதால், தேர்வு எழுதமுடியாமல் போய், படிப்பில் முதல் மாணாக்கனாக விளங்கிய திரு.வி.க, பள்ளி இறுதித் தேர்வில் தோல்வியுற்றார். அதனால் மனம் விரக்தி அடைந்து, சிலகாலம் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவராக இருந்தார். பின், உறவினர் ஒருவரின் வற்புறுத்தலால், வணிகப் பள்ளியில் சேர்ந்து, வணிகக் கணக்கியல் பயின்று தேறினார். ஆரம்பத்தில் தன் தந்தையிடமும் அதன்பின் கதிரைவேல் பிள்ளையிடமும் தமிழ் கற்ற திரு.வி.க, பின்பு சுவாமிநாத பண்டிதர், மயிலை மகாவித்துவான் தணிகாசலம், சிதம்பர முதலியார் போன்றோரிடம் திருமறைகள், நீதி நூல்கள், ஞான நூல்கள், இலக்கணம், இலக்கியங்கள் ஆகியவற்றைக் கசடறக் கற்றார். அயோத்தி தாசரிடமிருந்து பெளத்தக் கல்வியையும் கற்றார். எல்லா ஆசிரியர்களுமே அவரிடம் இயற்கையாகவே அமைந்திருந்த அறிவையும் திறமையையும் கண்டு வியந்தனர்; மதித்தனர். ஓவியத்திலும் இசையிலும் கூட அவருக்கு ஆர்வம் இருந்தது. அக்கலைகளைப் பற்றிய ஆய்ந்த, நுட்பமானக் கருத்துக்களை எடுத்துச் சொல்லும் அளவிற்கு அந்த ஆர்வம் அவரிடமிருந்தது. இயற்கை அழகை ஆராதிக்கின்ற மனப்பாங்கு அவரிடம் இயற்கையாகவே அமைந்திருந்தது. இடையில் குடும்பத்தில் ஏற்பட்டப் பொருளாதார நெருக்கடியினால், சென்னை ஸ்பென்சர் நிறுவனத்தில் அட்டவணைப் பிரிவில் திரு.வி.க பணியில் அமர்ந்தார். ஓய்வு நேரங்களில் படிக்கவும் எழுதவும் செய்தார். அப்போது அவருக்கு நாட்டின் விடுதலைப் போரில், அதன் ஒரு அங்கமான சுதேசி இயக்கத்தில் ஆர்வம் பிறந்து மிகுந்தது. சென்னைக் கடற்கரையில் விபின்சந்திரபாலர் ஆற்றிய, மிகவும் புகழ்பெற்ற சொற்பொழிவு அவரை மிகவும் உலுக்கியது. கல்கத்தாவிலிருந்து அரவிந்தரின் 'வந்தேமாதரம்' பத்திரிக்கையை வரவழைத்து, தானும் படித்து, தான் படித்த விடுதலை இயக்கச் செய்திகளை எல்லாம் தன்னுடன் பணியாற்றியவர்களுக்கும் அவர் எடுத்துச் சொல்லி வந்தார். இதைக் கண்டு எரிச்சலுற்ற ஆங்கிலேயருக்குச் சொந்தமான ஸ்பென்சர் நிறுவனத்தின் நிர்வாகம், அவரைக் கூப்பிட்டு எச்சரித்தது. அதனால் வெகுண்டு, தன் பணியைத் துறந்து வெளியேறினார். பின்னர், தன் தமையனாருடன் சேர்ந்து ஒரு அச்சுக்கூடத்தைத் துவக்கினார். அங்கேதான் முதலில் 'திருமந்திரம்' பதிப்பிக்கப்பட்டது. அதன்பின், அவரின் சிறப்புக் குறிப்புகளுடன் 'பெரியபுராண'மும் அங்கே வெளியிடப்பட்டது. இருப்பினும், ஏற்பட்டப் பொருள் இழப்பினால், இரண்டு ஆண்டுகளில் அந்த அச்சுக்கூடம் மூடப்பட்டது. பின்னர், தான் படித்த வெஸ்லியன் பள்ளியிலேயே ஆறாம் வகுப்பு ஆசிரியராக திரு.வி.க பணியில் சேர்ந்தார். அப்போது அப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பணிபுரிந்த ஜான் இரத்தினம் மிகுந்த தமிழ் ஆர்வம் உள்ளவராக இருந்தார். திரு.வி.க-வின் தமிழ்ப் புலமையைக் கண்டு வியந்து, தலைமையாசிரியர் அவரை வெகுவாக ஆதரித்தார். திரு.வி.க-வின் வருவாயைக் கூட்டும் பொருட்டே, 'வெஸ்லியன் தொழிற்பயிற்சி நிலையம்' என்று ஒன்றைத் தொடங்கி, அதில் திரு.வி.க-வை வணிகக் கணக்கியல் கற்பிக்கும் பகுதிநேர ஆசிரியாராகவும் பணியமர்த்தினார். இந்த ஜான் இரத்தினத்தின் மூலம்தான் திரு.வி.க கிறித்துவ மதத்தின் நுட்பமான கோட்பாடுகளை எல்லாம் கேட்டறிந்தார். சிறிது காலத்திற்குப்பின், தன் தகுதியால் திரு.வி.க பள்ளியின் தலைமைத் தமிழாசிரியராகவும் பதவி உயர்வு பெற்றார். திருமனமே வேண்டாமென்றிருந்த திரு.வி.க-வை, திருமணத்திற்கு ஒப்புகொள்ள வைத்தவரும் இந்த ஜான் இரத்தினமே. பள்ளியில் தமிழ்ச் சங்கம் நிறுவி, சக ஆசிரியர்களின் ஊதிய மேம்பாட்டிற்கும் வசதிக்கும் உழைத்து, தன் பணியில் மிகவும் பரிமளித்த திரு.வி.க, ஒன்றைரை ஆண்டுகாலமே பள்ளிப் பணியில் இருந்தார். 1912-ஆம் ஆண்டு, கமலாம்பிகை என்ற மாதரசியை மனைவியாகப் பெற்றார். தன் கணவனிடம் அந்தப் பெண் கேட்டது பொன்னும், மணியும், புடவையும், அழகு சாதனங்களும் அல்ல. கல்வியை மட்டுமே அவரிடம் கேட்டார். திரு.வி.க-வும் தன் மனைவிக்கு கல்வியையும் காப்பியங்களையும் கற்பித்து வந்தார். அவர்களின் இனிய திருமண வாழ்வின் அடையாளமாக, அவர்களுக்கு ஒர் ஆண் மகவு பிறந்து சில நாட்களிலும், பிறகு ஒரு பெண்பிள்ளை பிறந்து ஒராண்டிலும் இறந்தனர். 1918-ல் அவர் மனைவி எலும்புருக்கி நோய்க்கு ஆளாகி எமனுக்கு இரையானார். ஆறு ஆண்டுகளில், திரு.வி.க-வின் இல்வாழ்க்கை தொடங்கி முற்றும் முடிந்துவிட்டது. சுற்றமும் நட்பும் மிகவும் வற்புறுத்தியும், மறுமணம் செய்துகொள்ள திரு.வி.க மிகத் திண்ணமாக மறுத்துவிட்டார். மனைவியின் மறைவிற்குப் பிறகு, தான் பார்த்துவந்த தலைமைத் தமிழாசிரியர் பணியைத் துறந்து, பொதுத் தொண்டில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொள்ளத் தொடங்கினார் திரு.வி.க. தன்மீது பெருத்த அன்பு வைத்திருந்த, குறுகிய காலத்திலேயே தன்னைப் பலவகையிலும் பண்படுத்திய தன் மனைவியின் நினைவாக, பெண்ணின் பெருமை இவ்வுலகில் நன்கு விளங்கப் பாடுபடுவதென உறுதிபூண்டு செயலாற்றினார். அப்பொழுது திலகரும், அன்னிபெசண்ட் அம்மையாரும் ஒன்றுபட்டு நடத்திவந்த தன்னாட்சிக் கிளர்ச்சி அறப்போர் திரு.வி.க-வை வெகுவாக ஈர்த்தது. அந்நாளில் புகழ்பெற்று விளங்கிய 'New India' நாளிதழின் துணையாசிரியராக இருந்த சுப்பராய காமத் என்பவர் திரு.வி.க-வின் நெருங்கிய நண்பர். சுப்பராய காமத்தின் முயற்சியினால் தொடங்கப்பெற்ற 'தேசபக்தன்' நாளிதழில், திரு.வி.க ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தினர். தமிழிப் பத்திரிக்கைத் துறையில் ஒரு புதிய, ஒளி வீசும், தெளிவான, சுவையான, எளிதில் புரியும் உரைநடை வழக்கு பிறந்தது. பரலி.சு.நெல்லையப்பர், வெ.சாமிநாத சர்மா போன்றோர் அவரிடம் இந்தப் பத்திரிக்கையில் உதவியாசிரியர்களாகப் பணிபுரிந்தனர். ஆங்கிலேய ஆட்சியின் மீதும், அதிகார வர்க்கத்தின் மீதும் அனல் கக்கும் கருத்துக்களை, தேசபக்தியைத் தூண்டும் சிந்தனைகளை, தேசத் தலைவர்களின் எழுச்சி மிக்கப் பேச்சுக்களை எல்லாம் திரு.வி.க இந்தப் பத்திரிக்கையில் தனக்கேயுரிய, புத்தொளி வீசும், அழகியத் தமிழ்நடையில் எழுதினார். பின்னர், இதழின் உரிமையாளர் மாற, இதழின் அச்சுக்கூடம் அவருக்குத் தெரியாமல் அடமானம் வைக்கப்பட, மனம் வெறுப்படைந்த திரு.வி.க, இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் பத்திரிக்கைப் பொறுப்பைத் துறந்து, அதிலிருந்து வெளியேறினார். பின்னர், வ.வே.சு. ஐயரை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்துகொண்டிருந்த 'தேசபக்தன்' நாளிதழ், பின் வாரயிதழாக மாறி, அதன்பின் அடியோடு மறைந்தது. திரு.வி.க-விடம் மிகவும் அன்பு பூண்டிருந்த ஒருசில தொழிலாளத் தோழர்கள் தாமாகவே முன்வந்து அளித்தப் பொருளுதவியைக் கொண்டு, 1920-இல் அவரால் ஒரு அச்சுக்கூடம் வாங்கப்பட்டது. அந்த அச்சுக்கூடத்திலிருந்து, புகழ்பெற்ற 'நவசக்தி' வார இதழ் திரு.வி.க-வை ஆசிரியராகக்கொண்டு வெளிவரத் தொடங்கியது. அவ்விதழில், அரசியல் மட்டுமின்றி, பெண்கள் நலன், சமூகச்சீர்திருத்தம், மொழிச் சிறப்பு, கலையாக்கம், சன்மார்க்க நெறிகலந்த சமதர்மம் எனப் பொதுப்பகுதிகளும் இடம் பெற்றன. வன்மைக்கும், மென்மைக்கும் உள்ள வேற்றுமையே, தேசபக்தன் நாளிதழுக்கும், நவசக்தி வார இதழுக்கும் இருந்தது. இதழ் அடைந்த புகழாலும், பெற்ற வரவேற்பாலும், ஈ.வெ.ரா. பெரியாரின் ஆலோசனை மற்றும் நிதியுதவியாலும், வாரப்பதிப்பாக வந்துகொண்டிருந்த நவசக்தி, கூடுதலாக மாதம் மும்முறைப் பதிப்பாகவும் 1923-ல் வரத்தொடங்கியது. கல்கி நவசக்தியில் அப்பொழுது துணையாசிரியராகப் பணிபுரிந்து வந்தார். திரு.வி.க விடம் மிகுந்த பக்தியும், பேரன்பும் பூண்டிருந்தார். திரு.வி.க-வும் கல்கியிடம் பேரன்பு கொண்டிருந்தார். கல்கியைப் பற்றி தன் நூல்களில் குறிப்பிடும் போதெல்லாம், 'தம்பி' என்றே அன்போடு விளித்து திரு.வி.க குறிப்பிடுகின்றார். 1939-ல் அறிவிக்கப்பட்ட போர்கால அவசரச் சட்டங்களினால், பல பத்திரிக்கைகள் முடக்கப்பட்டன. நவசக்தியும் அம்முடக்கலுக்கு ஆளாகியது. 1941-ல் தான் பார்த்துவந்த ஆசிரியர் பொறுப்பை மற்றொருவரிடம் விட்டுவிட்டு, பத்திரிக்கையை விட்டு விலகி, திரு.வி.க, முழுநேர சமரச சன்மார்க்கத் தொண்டில் ஈடுபடத் தொடங்கினார். தேசப்பக்தியைத் தூண்டுவதற்கு பாரதிக்கு இருந்தது அவரின் கவிதையும் பாட்டும். நம் திரு.வி.க-விற்கு இருந்ததோ, அவருடைய தெளிந்த, எளிய, அழகிய, எழுச்சியூட்டும் உரைநடை. நாட்டுப்பற்று மிக்கவரான திரு.வி.க, தேசீய அரசியலில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர். காந்தியடிகளைச் சந்தித்து அவருடன் பழகியிருக்கிறார். காந்தியடிகளின் வேண்டுகோளின்படி, அவருடைய ஆங்கில உரைகள் சிலவற்றை தமிழில் திரு.வி.க மொழி பெயர்த்திருக்கிறார். திலகரைச் சந்த்தித்து அவருடனும் பழகியிருக்கிறார். பாரதியின் சமகாலத்தவர், ஆதலால் அவருடனும் பழகி, அவருடைய பாடல்களுக்கு ஒரு பெரிய ரசிகராக இருந்திருக்கிறார். வ.உ.சி, ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி முதலியோரின் நண்பராய் இருந்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் உறுப்பினாரய் இருந்து, பல கூட்டங்களக்குத் தலைமை தாங்கி நடத்திக் கொடுத்திருக்கிறார். இருப்பினும், மனிதநேயமும் மக்கள் நலனனும் அவரின் அரசியல் கொள்கைகளாக இருந்திருக்கின்றன. அவர் கூறினார்: 'நான் சாதி, மத, நிற, மொழி, நாடு முதலிய வேறுபாடுகளைக் கடந்தவன். பொதுமக்களின் சுகவாழ்வு மட்டுமே எனது குறிக்கோள். என்னுடைய அரசியலும் அதுவே. யார் என் கருத்துக்கு, நோக்கத்திற்கு உடன்படுகிறார்களோ அவர் கட்சியே என் கட்சி.' திரு.வி.க-வின் இத்தகைய அணுகுமுறைதான் எதிர்த்தரப்பிலிருந்த, மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற அறிஞர் அண்ணா அவர்களை மிகவும் கவர்ந்தது. 'அரசியலில் புயலாகவும், தமிழில் தென்றலாகவும் இருப்பவர் நம் திரு.வி.க. நூல்களிலே நுண்ணிய உரைகளை அழகிய தமிழில் தீட்டியவர் நம் திரு.வி.க,' என்று அறிஞர் அண்ணா உரிமையுடனும், பெருமையுடனும், பெருமிதத்துடனும் குறிப்பிட்டிருக்கிறார். அந்நியரின் பிடியிலிருந்து தன் தாய் நாட்டையும், அந்நியமொழிகளின் ஆதிக்கத்திலிருந்து தன் தாய்மொழியையும் விடுவிக்கத் தொடர்ந்து போராடிய இப்பெருந்தகையின் ஊனுடம்பு 1953-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17-ஆம் நாள் மண்ணுலகைவிட்டு மறைந்தது. அவர் சுவாசித்தக் காற்று அன்று நின்றது. ஆனாலும், அவரிடமிருந்துப் பிறந்து, சுகமாக வீசிவந்த தென்றல் நின்றுவிடவில்லை. தொடர்ந்து இன்றும் வீசிவருகிறது - மற்ற காற்றலைகளுக்கு எப்படி வீசுவது, எப்படி வருடுவது, எப்படித் தீண்டுவது என்று நாளும் கற்றுத் தந்தபடியே! 1983-ஆம் ஆண்டு அவருடைய நூற்றாண்டு விழா தமிழகமெங்கும் மிகச் சிறப்பாக தமிழ்நாடு அரசாலும் மற்ற தமிழ் அமைப்புகளாலும் கொண்டாடப்பட்டது. கட்டிடங்களுக்கும், பாலங்களுக்கும், நகர்களுக்கும், பூங்காக்களுக்கும் அவர் பெயர் வைக்கப்பட்டது. அதன்பின் வழக்கம் போல் எல்லாம் மறக்கப்பட்டன. நினைப்பதும் ஏத்துவதும், விழாவோடு விடைபெற்றன. திரு.வி.க ஒரு தலைசிறந்த மேடைப் பேச்சாளர். மடைதிறந்த வெள்ளமென, உணர்ச்சியும், எழுச்சியும் எழுப்பும், கருத்தாழமுள்ள பல உரைகளை அவர் நிகழ்த்தியிருக்கிறார். அரசியல், சமயம், சமூகம் என்ற பல்வேறு தலைப்புகளில், பல இடங்களில் அவர் நிகழ்த்திய உரைகள் அவை. கட்டிப்போடுகின்ற பேச்சாற்றல் கொண்டவர் அவர். கேட்பாரைப் பிணிக்கும் தன்மையுடன், கேளாரையும் கேட்க விரும்ப வைக்கும் வகையினதாய், மாற்றாரையும் மயக்கி தன்வசம் ஈர்க்கும் வண்ணம் அமைந்தவை அவருடைய மேடைப் பேச்சுக்கள். அவருள் சுடர்விட்டுத் திகழ்ந்த உண்மை, நேர்மை, ஒழுக்கம், நியாயம், தியாகம், கனிவு, பனிவு, துணிவு அவருடைய எழுத்துக்கும் பேச்சுக்கும் ஓளியும் உறமும் அளித்தன. அந்தக் காலத்தில் மேடைப் பேச்சில் ஒரு சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த அறிஞர் அண்ணாவையே மிகவும் கவர்ந்தப் பேச்சாளர் திரு.வி.க என்றால், அவருடையப் பேச்சாற்றலுக்கு வேறு என்ன சான்று வேண்டும்? மொழிக் காவலராகவும் விளங்கிய அவர், 'தாய்மொழியின் வாழ்விழந்தால் தரைமோதி மாய்தல் நலம், போய்க் கடலில் விழுதல் நலம், பொலிதருமோ உடலுயிரே' என்று பொங்கி முழங்கிய அவர், தாய்மொழி வழிக் கல்வியையும், தமிழர்கள் பல மொழிகளைப் பயில வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி வந்திருக்கின்றார். உலகில் பல மொழிகளில் இருக்கின்ற அறிவியல் மற்றும் கலைச்சொற்களைத் தமிழில் மொழிபெயர்த்தாலே அது தமிழுக்குச் செய்கின்ற பெரும் தொண்டாக இருக்கும் என்றும் அவர் கருதினார். தமிழ் மொழி மற்றும் தமிழ்க் கலை, இலக்கியங்களை உலகம் முழுவதும் பரப்புதல் வேண்டும் என்பது அவரின் அவாவாக இருந்தது. சென்ற நூற்றாண்டில், தமிழ் மொழி வாழ, வளம் பெற உழைத்தவர்களில் திரு.வி.க-விற்கு என்று ஒரு தனியிடம் எப்போதும் உண்டு. வாழ்க்கை வரலாறு, உரை நூல்கள், அரசியல் நூல்கள், சமய நூல்கள், சமயப் பாடல்கள் என்று 56 நூல்களை நம் திரு.வி.க படைத்துள்ளார. பங்களிப்பாளர்கள்

Friday, December 9, 2011

Olikkathir Nov 2011

OKR_Nov_2011

Sunday, December 4, 2011

வாசித்த இன்பம்

தனுஷ் பாடிய ஒய் திஸ் கொலைவெறி தங்லீஸ் பாட்டு உலகை பிடித்து ஆட்டிவரும் வேளையில் அதன்மீது Insult to Sensibilities என்ற விமர்சனமும் வந்துள்ளது. தமிழ் பெண்பாற் கவிஞர்களின் தேர்வு அதன் ஆங்கில மொழிபெயர்ப்புடன் தமிழ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதை அறிமுகப்படுத்தி வெங்கட் சாமினாதன் எழுதிய கட்டுரை வந்துள்ளது. சில கவிதை வரிகள் கீசுகீ சென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே அதே இனிய நடையில் ஆங்கிலத்தில்.. Black sparrows in droves Fill the air with ‘keech keech’ chirps Don’t you hear it, stupid girl? ”……………………………………………………………… செட்டிக்கடை வெட்டி வேரு சிவகாசிப் பன்னீரு மதுரைக் கடைச்சக்களத்தி மறக்கப் பொடிபோட்டா குதிரைவாலிக் கருது போல குறிச்ச பொண்ணு நானிருக்கேன் சரவட்டைக் கருதுக்காக சாம வழி போகலாமா?…….” Cuscus grass from Chetty shop Fragrant Sivakasi pannier He forgets in the vile spell Cast by the Madurai slut Here I am so georgeous Like lush paddy sheaf And I’am the girl anointed too; In search of measely stalk Should you scurry so far. சல்மாவின் கவிதை ஒன்று. அதன் முதல் பத்தியும் கடைசிப் பத்தியும். தன் வழி தவறி அறைக்குள் சிக்கிய பட்டாம்பூச்சி துவக்கிற்று தன் தேடலை …………………… என்றேனும் கதவு திறந்து வழி கிடைக்குமெனில் அது பறந்து தான் போகும் வர்ணங்கள் இல்லையென்றாலும் கூட Losing its way Trapped in the room Starts its search This butterfly One day some day Should door open and way found Sure it would wing its way out Though robbed of its hues. இதே போல திலக பாமா கவிதை ஒன்றின் ஆரம்பமும் இடையில் ஒன்றும்.. நினைவுப் பரணிலிருந்து எழுப்ப முடியவில்லை தூசிக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் வார்த்தைகளை ……………… மூடிய இமைகளுக்குள் உலவும் இருளுக்கு வெள்ளைக் காகிதங்களின் குணம் கவிகதைகளாய் என் நினைவுகளைச் சுமந்து மடி நிரப்பியிருக்கிறது…… Words Buried in a pool of dust I can’t retrieve from the memory’s loft The inky darkness Encased in shut eyelids Assumes White paper’s aspect Films my madi As poems Carrying my memories உமா மகேஸ்வரியின் வெளிவாசல் வழியே சலித்த மதியம் சாக்கடை நீரருந்தும் குருவி உதிர்கிற மென்மையும் உடைபடாக் கடினமும் விசித்திரமாய் முடைந்த மௌனம் The noon Filtered through the front door A sparrow drinking gutter water A silence A strange weave of Softly enveloping tenderness And unrelenting hardness.

Monday, November 7, 2011

Monday, October 31, 2011

ஒலிக்கதிர் அக் 2011

O_Oct_2011

ஒலிக்கதிர் செப் 2011

O-Sept11

Friday, September 30, 2011

கிராக்கிப்படி உயர்வு 4.8 சதம் 1-10-11 முதல் 52 சத கணக்கீடு

அஞ்சல் போனஸ் 60 நாட்கள் இரயில்வே போனஸ் 78 நாட்கள்

Thursday, September 1, 2011

Wednesday, August 10, 2011

ஊழியர் அளவீடுகள்

ஊழியர் அளவீடுகள்BSNL ன் நிர்வாக கமிட்டி 2006 முதல் புதிய ஊழியர் அளவீடுகள் குறித்து பேசி வருகிறது. ஏப்ரல் 2010ல் வெர்ஸன் 3யை வெளியிட்ட நிர்வாகம் தற்போது ஆகஸ்ட் 2011ல் வெர்சன் 4 என அதை திருத்தி கூடுதலாக அளவீடுகளை இறுக்கமாக்கி வெளியிட்டுள்ளது.
SSA மட்டத்தில் சொல்லப்பட்டுள்ள அளவீடுகள் குறித்து ஊழியர் அறிய தந்துள்ளோம்.

RM
.5k to 2 k வரை 1 RM
2k to 5k 3 RM
5k to 10k 4 RM
10k மேல் 5 RM
புறப்பகுதி(Outdoor)
2000 இணைப்புகளுக்கு 1 RM
ஸ்டோர்
துணைக்கோட்டம் 1 RM
மாவட்டம் 2 RM
1லட்சம் இணைப்புகளுக்கு மேல் உள்ள மாவட்டம் 4 RM

கேபிள் பராமரிப்பு
4000 இணைப்புகளுக்கு 1 RM
குழி தோண்டுதல் போன்றவைகளுக்கு காண்ட்ராக்ட்

RM அளவீடுகளில் Version 3 விட Version 4 இறுக்கமாக்கப்பட்டுள்ளது. உள்பகுதியில் 5000 இணைப்புகள் வரை 4 RM என்று 2010ல் சொன்னதை 2011ல் 3 என குறைத்துகாட்டுகிறது நிர்வாகம். அதேபோல் அவுட்டோர் பகுதியில் 1500க்கு 1 RM என்பதை 2000 என அளவீடுகளில் உயர்த்தியுள்ளனர். கேபிளில் 3000 இணைப்புகள் 1 RM என்பதை 4000 என உயர்த்தியுள்ளனர். ஸ்டோர் பகுதியில் துணைக்கோட்டம் 2 RM என்பதை 1 RM என மாற்றியுள்ளனர்.

TM
2500 இணைப்புகளுக்கு 1 TM
10000 DSLAM(BB Switch) 1 TM

புறப்பகுதி(Outdoor)
.5k வரை 1 TM
.5k to 2 k 300 இணைப்புகளுக்கு 1 TM
2kக்கு மேல் 750 இணைப்புகளுக்கு 1 TM

கேபிள் பராமரிப்பு

2k வரை 1 TM
2kக்கு மேல் 4000 இணைப்புகளுக்கு 1 TM

மார்கெட்டிங் 1 TM per AGM
WLL programming 5000க்கு 1 TM
ஸ்டோர் 1 TM லட்சம் இணைப்புவரை

TMஅளவீடுகளில் Version 3 விட Version 4 புறப்பகுதி கேபிள் பராமரிப்பு பகுதிகளில் இறுக்கமாக்கப்பட்டுள்ளது

TOA
CSC 10000 வாடிக்கையாளர்களுக்கு 1 SrTOA
HR Package 1000 ஊழியர்க்கு 1 SrTOA
Temp Adv etc 1000 ஊழியர்க்கு 1 SrTOA
Bank Accts 500 ஊழியர்க்கு 1 SrTOA
Remitance 25000 இணைப்புகளுக்கு 1 SrTOA
Marketing 1 SrTOA
Call Centre 1லட்சம் இணைபுகள் வரை 1 SrTOA
Record Keeping 10000 postpaid 100000 prepaid வாடிக்கையாளர் 1 SrTOA
Outstanding 20000 இணைப்புகளுக்கு 1 SrTOA
MM Store 2 SrTOA
LeaveReserve 1 SrTOA
EMC 1250 cases மாதம் 1 SrTOA

TTA
BroadBand 4000 DSLAM 1 TTA
BroadBand 5000 இணைப்புகள் 1 TTA
Commercial 20000 வடிக்கையாளர்கள் 1 TTA
Marketing 1 TTA
Transmission 580 PCM Streams 1 TTA
OFC Route 200KM 1 TTA
LC 200 1 TTA
Call Centre 100000 இணைப்புகள் 1 TTA
PowerPlant 1 TTA
FRS 1 TTA
Internal Mtce 4 TTA
BTS Urban 60 Rural 30 1 TTA

TTA அளவீடுகளில் Version 3 விட Version 4 BTS பகுதியில் இறுக்கமாக்கப்பட்டுள்ளது.

இதைத்தவிர GM, CGM அலுவலகங்கள் CFA CM Sales சிவில் எலக்ட்ரிகல் பகுதிகளுக்கு அளவீடுகள் தனியே தரப்பட்டுள்ளது. நமது அகில இந்திய தலைமை தொழிற்சங்கங்களை கலந்து பேசாமல் புதிய அளவீடுகளால் வரப்போகும் தாக்கம் குறித்து தெரிவிக்காமல் அமுல் படுத்தக்கூடாது என வலியுறுத்தியுள்ளது.
9-8-11

Saturday, July 9, 2011




மார்க்சிய சிந்தனையின் பிரயோகம் இல்லாமல் சமூக ஒடுக்குமுறைகளை அழிக்கமுடியாது : கார்த்திகேசு சிவத்தம்பி
நீங்கள் ஆய்வு, திறனாய்வுத் துறைக்கு வந்த பின்னணி என்ன?
பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது தான் கைசலாசபதியோடு தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் நாடகத்துறையில் ஈடுபாடு கொண்டவர்கள்.குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழைப் பேசி நடிப்பதில் இருவருக்கும் புகழ் இருந்தது. எனக்கு நாடகங்களின் மூலம் நடிப்புப் பின்புலமும் அமைந்தது.
பின்னர் 4 ஆண்டுகள் பாடசாலை ஆசிரியராகப் பணி புரிந்து கொண்டு எம்.ஏ.ஆயத்தம். நான், கைலாசபதி, தில்லைநாதன் (பேராதனைப் பல்கலைப் பேராசிரியர்) மூவரும் ஒன்றாக எம்.ஏ. செய்தோம்.
இது ஐம்பதுகளில் நடந்தது. இந்தக் காலகட்டத்தில் இடதுசாரி எழுச்சி காணப்பட்டது. அந்த எழுச்சியில் நாங்கள் ஈர்க்கப்பட்டோம். அப்போது எங்களுக்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் ஈடுபாடு வந்தது.
அந்தச் சமயத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் இந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு செல்வாக்கு அதிகம் இருந்தது. ஆனால் எல்லோருமே கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்கள் அல்ல. இதில் இரண்டு போக்குகள்
1. தென்னிந்திய வணிகச் சஞ்சிகைகளின் செல்வாக்கிலிருந்து விடுபடவேண்டும்.
2. இலங்கையின் சுதேச நிலைமைகளைப் பேசவேண்டும்.
ஆகிய இரண்டு போக்குகள் இருந்தன. இந்தப் போக்குகளில் கதை எழுதியவர்கள் யார் என்பது மிக முக்கியமானது. இவர்கள் புதுத்தலைமுறை எழுத்தாளர்கள்.. டேனியல் ஜீவா, ரகுநாதன் போன்றவர்கள். இவர்களை எழுத்தாளர்களாக ஏற்காத நிலைமை ஒன்றிருந்தது. இவர்களின் எழுத்துக்களின் பிரச்னைகளை ஏற்பதும் அன்றைக்கும் பிரச்னை. இவர்களைப் போல் பேச்சுத் தமிழில் , வழக்குத் தமிழில் கொச்சையாக பச்சையாக எழுதலாமா என்கின்ற கேள்வி அந்தக் கட்டத்தில் பண்டிதப் பாரம்பரியத்தை நிறுவ விரும்பியவர்கள் இவர்களை கண்டித்தார்கள். புதிய தலைமுறையிலும் பலர் இவர்களிலிருந்து வேறுபட்டார்கள். புதிய எழுத்தின் உட்கிடக்கை பற்றிய பிரச்னை அது.
புதிய விஷயங்களை எழுதுவதும் கூடத் தமிழ் மரபில் ஒன்று தான் என்று நாங்கள் வாதிட்டோம். அப்போது நாங்கள் மூன்று காரியங்கள் செய்யவேண்டியிருந்தது. ஒன்று, தமிழை வரன்முறையாகப் படித்த பாரம்பரியத்தின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது. இரண்டு, இந்தப் புதிய இலக்கியவாதிகளுடைய தடங்களின் பொதுவான – உலகப் பொதுவான விஷயங்களைக் கண்டறியவேண்டியிருந்தது. மூன்றாவது அடிநிலை மக்களின் எழுத்து முறைமையை நியாயப்படுத்த வேண்டியிருந்தது. இதை அந்தக் காலத்தில் இழிசனம் இலக்கியம் என்றே பழித்தார்கள்.
பல்கலைக்கழகத்தில் படித்த காலத்திலேயே ரகுநாதன் நெருங்கிய பழக்கம். விஜயபாஸ்கரன், தி.க.சி தொடர்பும் உண்டு. சி.சு.செல்லப்பா தெரியும். அந்தக் காலகட்டத்தில் நாங்கள் தமிழகத்திற்கும் தெரிந்த எழுத்து ஆர்வலர்களாக மேற்கிளம்பினோம்.
அப்போது இரண்டு கடமைகள் எங்களுக்கு இருந்தன.
1.நவீன இலக்கியங்களைப் படைப்பது
2.பரம்பரை இலக்கியங்களை மீள்நோக்குச் செய்வது
சமூக விமர்சனம் செய்வதை, அதாவது மார்க்சிய நோக்கில் பார்ப்பதை நவீன இலக்கியங்களுக்கு மட்டுமல்லாமல் பழையவற்றிற்கும் கொண்டு போவதை எங்கள் கடமைகளாக அப்போது தான் உணர்ந்து கொண்டோம்.
எங்களுக்கு இயல்பாக இருந்த தேடலில் மார்க்சிய நோக்கில் தமிழ் இலக்கியத்தைப் பார்த்தோம். கமாலுதீன், சதாசிவம் போன்றவர்களுடன் சேர்ந்து இந்தத் தேடலை நடத்தினோம். அப்போது ‘இயக்கமும் இலக்கியமும்’ என்கின்ற என்னுடைய கட்டுரைத் தொடர் தேனருவி என்கின்ற இலங்கைச் சஞ்சிகையில் வந்து கொண்டிருந்தது. பாலுமகேந்திரா அப்போது இலங்கையில் இருக்கின்றார். அவரும் எங்களோட உறவாடிய நண்பர். அரசியல், சமூக, உளவியல், அறிவியல் தேடல் எங்களிடையே இருந்தது.
அந்தக் காலகட்டத்தில் எங்களிடம் இன்னொரு அம்சம் இருந்தது. அது பிற்காலத்தில் இல்லாமல் போய்விட்டது. அதாவது சிங்கள தமிழ்ப்புலமையாளரிடையே இருந்த உறவு எங்கள் சக மாணவர்களிடையே ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வோம். நாங்கள் தமிழ் பற்றிச் சொல்ல அவர்கள சிங்களம் பற்றிப் பேச இருவரும் ஆங்கில இலக்கியம் குறித்து வாதாட – இப்படி… துரதிர்ஷ்டவசமாக இலங்கையில் பிற்கால மாற்றங்களால் அந்த அம்சம் இல்லாமல் போய்விட்டது.
இத்தகைய ஊடாட்டங்கள் காரணமாக நாங்கள் திறனாய்வுக்கு வரவேண்டிய தேவை ஏற்பட்டபோது தான் முற்போக்கு இலக்கிய சம்பந்தமாக ஒரு நிலைப்பாட்டை எடுத்தோம். அந்த நிலைப்பாட்டை நிலைநிறுத்த முயலும்போது அதற்குப் பின்னர் நிலவிய இலக்கிய நோக்கை விமர்சிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கைலாசபதியிலன் தமிழ் நாவல் இலக்கியம் எனது தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் அந்தக் காலப்படைப்புக்கள்.
நவீன இலக்கியத்தில் ஈடுபட்ட பிறகு இந்த ஆய்வை pre modern period ( முன்நவீனத்துவக்கால கட்டத்திற்குக்) க்கு கொண்டு போக முடியாதா என்கின்ற கேள்வி எழுந்தது. அப்போது பட்ட மேற்படிப்பிற்காக கைலாசபதியும் நானும் பேராதனைப் பல்கலைக்கழகம் வந்தோம்.
மார்க்சியம் எங்களுக்குப் பெரிய உலகத்தைத் திறந்து விட்டது போல இருந்தது. மார்க்சியத்தை அறியும் வாய்ப்பு, அப்படித் தான் திறனாய்வுத்துறைக்கு வந்தோம்.
திறனாய்வு என்பது வெறுமனே அபிப்பிராயங்களைக் கூறுவதல்ல. ஒரு திட்டவட்டமான அடிப்படையில் இலக்கியங்களை நோக்குவது என்கின்ற ஒரு விஷயம் அதில் கலந்தது. இந்த இரண்டையும் இணைத்துப் பார்க்கின்ற ஒரு அநவாழனழடழபல ஐ நாங்கள் மேற்கொண்டோம். அந்தக் காலத்தில் க.நா.சு, சி.சு. செல்லப்பா, ரகுநாதன், ஆர்.கே.கண்ணன் போன்றவர்களோடு இருந்த தொடர்பு காரணமாக இரண்டையும் இணைத்துப் பார்க்கின்ற நோக்கு ஏற்பட்டது.
கைலாசபதி, சிவத்தம்பிக்கு முன்பு இலங்கையில் இலக்கியத் திறனாய்வு எப்படி இருந்தது?
எங்களுடைய காலத்திற்கு முன்பு இந்த மாதிரியான இலக்கிய விமர்சனம் இருந்தது கிடையாது. ஆனால், இலக்கிய ஈடுபாடு இருந்தது. மறுமலர்ச்சி இயக்கம் 40 களில் தொடங்குகிறது. அவர்கள் பாரதியைத் தங்கள் ஊற்றுக்காலாகக் கொண்டார்கள் .மற்றது இலங்கையில் இருந்த அரசியல் நிலைமைகள் காரணமாகத் தமிழ் பற்றிய பிரக்ஞையை முக்கியமான விஷயமாகக் கொண்ட போக்கு இவற்றை நாங்கள் இலக்கிய விமர்சனமாக நினைக்கவில்லை.
1956, 57 க்கு முன் வரன்முறையாக விமர்சனம் இல்லை. நாங்கள் கைலாசபதி,சிவத்தம்பி என்பது முக்கியமில்லை. அப்படி அதைப் பார்க்கக்கூடாது. இலக்கியத்தின் நன்மை,அதன் பணி என்பது பற்றிய விவாதம் தோன்றுவதற்கான சூழ்நிலை அல்லது புலமைச் சூழல் அதற்கு முன் இல்லை என்பது தான் குறிப்பிட வேண்டியது. இலக்கியத்தின் சமூகப் பணி சம்பந்தமான கருதுகோள்களை எடுத்துவைக்கிற அந்தச் சூழல் அதற்கு முன்பு இல்லை.
அறம்,பொருள், இன்பம், வீடு என்கிற நான்கு புருஷார்த்தங்கள் ஆன்ம விடுதலைக்குத் தான் இலக்கியம் என்கின்ற அந்தப் பாரம்பரியம் அல்லாமல் சமூக விடுதலைக்கும் இலக்கியம் பயன்படும். புலவர்கள் மட்டுமல்ல, யாரும் இலக்கியம் எழுதலாம். எவரும் எழுத்தாளர் ஆகலாம். …இந்த விதமான விவாதம் நடு 50 களில் தான் ஆரம்பம்.
ஒவ்வொரு எழுத்தையும் பிரசுரத்திற்கு முன்பாகவே நாங்கள் கூடி விவாதித்து விமர்சனம் பண்ணுவோம். ஒரு தோழமை உணர்ச்சியோடு இந்த விவாதம் நடக்கும். பிரசுரம் வந்துவிட்டதென்றால் அதை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் எங்கள் விவாதம், விமர்சனம் அமையும். பிற்காலத்தில் கைலாசபதியும் நானும் பேராசிரியர்கள் ஆனோம். அப்போதும் எப்போதும் எங்கள் குழுவில் எல்லோருமே தோழர்கள் என்கின்ற அடிப்படையில் தான் பழகினோம். ஒருவரையொருவர் விமர்சித்துக் கொண்டோம். டேனியல் ஜீவா, ரகுநாதன், நந்தி ..இவ்வாறாக எங்கள் குழு அமைந்தது.
தளையசிங்கத்தின் அணுகுமுறைகள் பற்றிச் சொல்லுங்கள்?
அவர் எங்களுக்கு சற்று முன்பே இலக்கியப் பிரவேசம் செய்தவர். சற்று வித்தியாசமானவர். இலக்கியத்திற்கு சமூக அடிப்படை சமூகத்தனம் தேவை என்றவர்,ஆனால் அதற்கு ஆன்மீக உயிர்ப்புஷம் வேண்டும் என்பது அவர் கருத்து. அவருக்கு எதிராக எங்கள் விவாதம் என்னவென்றால் மார்க்சியத்தை முழுதாக ஏற்கவேண்டும் என்பது தான். பின்னோக்கிப் பார்க்கும் போது பலமுறை சொல்லி இருக்கின்றேன். தளையசிங்கத்தின் நேர்மையைச் சந்தேகிக்கமுடியாது. தன்னுடைய கொள்கைக்காகப் போராடுபவர்.சமூகத் தளத்தோடு நில்லாமல் இலக்கில் அதன் விகசிப்பில் வேறுபடலாம் என்பவர் அவர்.
இலங்கையில் இலக்கியத்துறையில் அந்தக் காலகட்டத்தில் ‘விமர்சனம்’ ஏன் எதற்காக ஏற்பட்டது என்று தான் பார்க்கவேண்டும்.அப்போது ஒன்றாகப் படித்த அத்தனை பேரும் இலக்கிய விசாரத்தில் இறங்கினோம்.
ஒருவர் எழுதியிருந்தார். என் தகப்பனாருக்கே, சிவத்தம்பி என்பவர் இப்படியெல்லாம் எழுதுகின்றார் என்று எழுதியிருந்தார். நான் அவரது மகன் என்பது தெரியாத நிலை. என் தகப்பனார் அவன் என்னுடைய மகன் தான் என்றார்.இப்படி எங்கள் மீது மரபு காப்பவர்களால் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.
இது ஒரு அடிப்படையான Socio literary trend. Debate வந்தால் தானே ஆட்கள் வெளியே வரமுடியும். நாங்கள் வெளியே வரும்படியான சூழல் அன்று பாரம்பரியவாதிகளால் ஏற்பட்டது. ஆகவே வந்தோம் என்பது தான் முக்கியமே தவிர, கைலாசபதி, சிவத்தம்பி என்று பெயர்கள் மூலம் அதைக் குறிப்பது முக்கியமல்ல.
ஏன் இப்படி அமைந்ததென்றால் தமிழ் நாட்டுக்காரர்களுக்கு கைலாசபதி, சிவத்தம்பிக்கு முந்தைய விமர்சகர்களை அவ்வளவாகத் தெரியாது. ஆகவே அப்படிக் கேள்வியை அமைத்தேன்..
இலக்கிய விமர்சனம் எப்போது வரும்? இலக்கியத்தின் அம்சங்கள், பண்புகள் பற்றி ஒரு debate ஆரம்பம் ஆகும் போது தான் criticism.அது இன்றும் நடக்கின்றது. Marxist debate, strueturalistic debate, Neo Marxist debate இப்படி நாங்கள் சூனியத்திலிருந்து வரவில்லை. யாரும் அப்படிச் சூனியத்திலிருந்து வரமுடியாது. வரவும் கூடாது.
கைலாசபதியையும் உங்களையும் ஒருவராகவே – ஒன்று போலவே தமிழ் வாசகர்கள் கருதுகின்றார்கள். இருப்பினும் உங்கள் இருவரது ஆய்வு, திறனாய்வு அணுகுமுறைகளில் துல்லியமான வித்தியாசங்கள் இருக்கமுடியும். அவற்றை உங்கள் வார்த்தைகளில் பதிவு செய்யுங்கள்
ஆரம்பத்தில் நாங்கள் ரெண்டு பேருமே இந்த debate ல ஈடுபட்டிருந்தோம். கைலாசபதி இந்தக் காலகட்டத்தில் தினகரன் ஆசிரியராக இருந்தார். 1957 முதல் 67 வரை அவர் அதில் எழுத்தின் தன்மைகளுக்கு உருவாக்கம் தந்து வரும்போது எனக்கும் அதே வகையான உணர்வுகள் வந்திருக்கலாம். அடிப்படையில் நாங்கள் ஒரேவிதமான சிந்தனை உள்ளவர்கள்.நீண்டகால நண்பர்கள் கூட்டங்களில் பேசும்போது யார் முதலில் பேசுவது என்று இருவருக்கும் சண்டை வரும். ஏனென்றால் முதலில் பேசுபவர் இரண்டாமவர் கருத்தைச் சொல்லி விடுவோம். நாங்கள் ரெண்டு பேரும் ஒரே மாதிரித் தான் சிந்தித்தோம்.
பட்டப் பின் படிப்புக் கட்டத்தில் கைலாசபதி தத்துவத்தில் அக்கறை செலுத்தினார்.Heoric literature ஆய்வுக்குப் போன பிறகு comparative literature ஓப்பியல் சம்பந்தமான ஆய்வில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அது தானே அவரது . பிற்காலத்தில் ஒப்பியலில் தான் பெயர் பெற்றார் . புகழ் பெற்றார்.
என்னைப் பொறுத்தவரை எனக்கு வரலாறு, பொருளாதாரத் தொடர்புகள் இருந்த காரணத்தினால் தான் சமூக வரலாற்றில் அதிகம் ஈடுபாடு காட்டினேன். Ideology & Literary History இல் அழுத்தம் செலுத்தினேன். ஐனநழடழபல இரண்டு பேருக்கும் ஒண்ணு தான். Personality க்குள்ள ஒற்றுமையைப் பார்க்கவேண்டுமென்று சொன்னால் தனித்தமிழைப் பற்றி ரெண்டு பேருமே எழுதியிருக்கின்றோம் . என்னுடைய தனித்தமிழின் அரசியல் பின்னணி நூலாக வந்துள்ளது. அவரும் அதே மாதிரி எழுதியிருக்கின்றார்.
அவருடைய இலக்கிய ஆய்வு Marxist analysis of the Literary aspect.
ஆனால் இரண்டு பேருமே தனித்தமிழ் இயக்கத்தின் விமர்சகர்கள் இல்லையா?
ஆமாம். extremely critical இரண்டு பேருமே அப்படித்தான்.ஆனால் கோணங்கள் வேறு
அதன் பிறகு நான் நாடகத் துறையில் பிரவேசித்தேன். கைலாசபதிக்கு நாடகத்தில் அக்கறை ஈடுபாடு இல்லையென்று சொல்லக்கூடாது. அவரும் நடிகராக இருந்தார்.நாடகம் பற்றி அற்புதமாக விமர்சனம் செய்யக்கூடியவர். யார் எதைச் செய்தோம் என்று சொல்வது கஷ்டமாயிருக்கும். பின்னோக்கிப் பார்க்கும்போது அவர் இன்று உயிருடனில்லை. எனக்கு 65 வயதாகின்றது. அவருடைய ஸ்பெஷாலிட்டி ஒப்பியல் இலக்கியம். என் அழுத்தம் சமூக இலக்கிய வரலாற்றின் மீது. அந்த மாதிரி தான் எங்கள் இருவரையும் பார்க்கவேண்டும்.
இப்போதும் நீங்கள் தனித்தமிழ் இயக்கத்தின் எதிரி தானா?
தனித்தமிழ் இயக்கத்தை நான் இப்படிப் பார்க்கின்றேன். தமிழின் தனித்துவத்தை, அதன் சமூகப் பிரச்னைகளை மொழி நிலையிலிருந்து பேணுவதற்காகத் தோன்றிய இயக்கம் அது.ஆனால் ஒரு மொழி அவ்வாறு இயங்க இயலாது. அதற்காக ,தூய தமிழபை; பயன்படுத்தும் முயற்சிக்கு நானோ கைலாசபதியோ எதிரிகளல்ல. மொழியின் ஆளுமையை, ஆற்றலை பேசவேண்டும், எழுதவேண்டும் என்றால் நாம் சில வரலாற்று நீரோட்டங்களை நிராகரிக்கவேண்டியிருக்கின்றது. அதாவது பண்பாடுகள் இணைகின்றபோது மேலோங்கியுள்ள பண்பாடு.
இடதுசாரி அரசியலை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? சோவியத் ஒன்றியச் சிதறல், சீனப் பாதை மாற்றம் என்கின்ற சூழலில் மார்க்சியத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
மார்க்சியம் பல்வேறு நாடுகளில் பல்வேறு மாதிரி இருக்கின்றது. லெனின்,ஸ்டாலின், மாவோ போன்றவர்கள் வேறு வேறு பிரச்னைகளை எதிர்கொண்டார்கள். இத்தாலியில்; வேறு மாதிரி பிரச்னைகள், பிரான்சில் இன்னொரு வகை, அமெரிக்காவில் முற்றிலும் வித்தியாசப்பட்ட மார்க்சியம் பிரிட்டன், ஹங்கேரியிலும் இப்படியே சூழலுக்கு ஏற்ற வகையில் மார்க்சியம் பற்றிய சிந்தனைகள் வருமத். இந்தச் சிந்தனைகள் எல்லாவற்றையும் நாங்கள் அவற்றுக்குரிய வரலாற்றுப் பின்புலத்தில் dynamics உடன் அசைவியக்கத்துடன் விளக்கிக்கொண்டு எங்களுக்கு எது சரி என்று பார்க்கவேண்டும்.
அதாவது ஒரே மாதிரியான தீர்வுகள் இல்லை
கிராம்சி சொல்கிற மாதிரி சில கருத்துக்களுக்கு hegemony இருக்கின்றது. குடும்பம், சமூகம், …பற்றிய சில கொள்கைகள் அழிவதில்லை. இவை அழியாததால் தனிச் சொத்து அழியாமல் போவதுமில்லை.
மார்க்சிஸ்ட் இன்டலெக்சுவல் எப்படிப் பார்க்கவேண்டும் என்றால், இந்தச் சிந்தனை மரபுகளுக்கான வரலாற்றுத் தேவைகள் யாவை. அந்த வரலாற்றுத் தேவைகளுக்கும் நமது வரலாற்றுத் தேவைகளுக்கும் உள்ள காரணகாரியத் தொடர்புகள். Marxim is a guide to polit action .ஆனபடியால் நாங்கள் இப்பொழுது மார்க்சியத்தைச் சரியான படியாகப் பார்க்கவேண்டியிருக்கின்றது
அதாவது இந்தப் பின்னடைவு காலத்தில்….
பின்னடைவு என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் சில பேர் சொல்வது மாதிரி இது வந்து
சோஷலிசம் என்கிற ஐடியாலஜியின் பின்னடைவு அல்ல.
கோர்ப்பச்சேவ் இந்தப் பின்னடைவுக்கு கருவியாகப் பயன்பட்டுவிட்டார் இல்லையா?
ரஷ்யாவில் சோஷலிசத்தின் வீழ்ச்சி அகக்காரணிகளால் ஏற்பட்டதா, புறக்காரணிகளாலா என்று கேட்கிறீர்கள். நான் சொல்கின்றேன்.more due to internal, than due to external reasons.
Not because of Gorbachev alone?
கோர்பச்சேவ் கொண்டு வந்த கிளாஸ்தாஸ்ட் வருவதற்கான சூழல் அங்கே இருந்தது. ஆனால், அதற்கு முன்பே அவர்களது விவசாயக் கொள்கை சரியத் தொடங்கிவிட்டது. அந்த அமைப்பும் சரியாக இயங்கிக்கொண்டிருக்கவில்லை
அதனால் தான் சுலபமாகப் போய்விட்டது ?
ஆமாம். சுலபமாகப் போய்விட்டது.புரட்சிகர எழுச்சி இல்லாத கசகஸ்தானிலும் ஆர்மேனியாவிலும் எப்படிக் கம்யூனிசம் நீடிக்கும். ரஷ்யாவில் புரட்சி நடந்தது. மாஸ்கோவில் அது நடந்தது. பிற இடங்களில் புரட்சியின் தேவை உணரப்படவே இல்லை. இன்டலக்சுவல்சும் சித்தாந்தத்தைக் கொண்டு போகவில்லை.
சைனாவில் இன்னும் கம்யூனிசம் பெயரளவுக்காவது நீடிக்கக் காரணம்? அதாவது, சைனாவிலும் இன்று சோஷலிசம் இல்லை….இன்னொரு வகையாகப் போய்க்கொண்டிருக்கின்றது இல்லையா?
சைனாவில் Thought of Mao என்றார்கள். ஏன் இப்படிச் சொல்லவேண்டும். அது கன்பூஷியன் பாரம்பரியம். அது ஒரு தேசிய மாடல். இதனால் தான் இப்போது கலாச்சாரத்தில் அழுத்தம், கவனம் தேவை என்கிறோம். கலாச்சாரத்தில் தான் தனிப்பட்ட சக்திகளும் சமூகச் சக்திகளும் பின்னிப்பிணைந்து செயற்படுகி;ன்றன. மனிதர்களின் தனித்தன்மைகளும் சமூக நிலைப்பட்ட அம்சங்களும் இந்தப் பண்பாட்டில் தான் நிலைபெற்று நிற்கும். அதற்கான தனிப்பட்ட அணுகுமுறை தேவைப்படுகின்றது.
சைனாவைப் பற்றி என்ன விமர்சனம் என்றால் அங்கேயும் கம்யூனிசம் போயாகிவிட்டது. வெறும் அரசியல் மட்ட கம்யூனிசம் தான் இருக்கின்றது. பொருளாதாரக் கொள்கைகளைக் கைகழுவியாகிவிட்டது என்பது தான்.
சைனா மிகப் பெரிய தேசம்.அங்கே எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்துவது கஷ்டம். ஆனால் ரஷ்யாவில் ஏற்பட்ட அளவு வீழ்ச்சி. இன்னும் ஏற்படவில்லை. அரசு இன்னும் இருக்கின்றது.
நாம் சோஷலிசத்தின் வீழ்ச்சி பற்றியே பார்க்கின்றோம். முதலாளித்துவம் இந்தக் காலகட்டத்தில் தன்னை எப்படி வளர்த்துக் கொண்டது என்று பார்க்கவேண்டாமா ?
மாறுதலுக்கேற்ப முதலாளித்துவம் தான் மாறிக்கொள்கின்றது. முந்தைய ஏகாதிபத்தியம் போல இப்போது அரசியல் குறுக்கீடு தரக்கூடிய நிலையில் அது இருக்கவில்லை. பொருளாதார ஏகாதிபத்தியமாக மாறிவிட்டது. . Trans- national companies வந்தாயிற்று. அது ஒரு புறம் . Concept of managemant . இன்று உலகத்தில் எல்லாப் பல்கலைக்கழகத்திலும் மனேஜ்மென்ட் படிப்பிக்கின்றார்கள். இதற்குக் காரணம் என்ன? இந்த மனேஜ்மென்ட் என்கிற ஐடியாவே sophisticated from of Capitalism அதாவது maximisation of profit .
லாபத்தை மட்டுமல்ல, சுரண்டலையும் அதிக பட்சமாக்குகிற முதலாளித்துவ நிறுவனம் அல்லவா?
ஆமாம். இ;ந்த முதலாளித்துவம் கம்யூனிசத்தின் தோற்றத்தையும் எழுச்சியையும் பார்த்துத் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு பிரச்னையை எதிர்நோக்கிய முறைமை இருக்கின்றதே அது மிகவும் சுவாரஸ்யமானது. அது தான் நாடு கடந்து எல்லை கடந்து பரவிய வசயளெயெவழையெட பின்னணி. இன்றைக்கு குழசன குழரனெயவழைn அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் எங்கே இருக்கின்றது. எல்லா இடத்திலும் அல்லவா இருக்கின்றது? ஆனாலும் ஓர் இடத்தில் தான் இருக்கின்றது. ஆக முதலாளித்துவத்தின் வளர்ச்சி – அது சோஷலிச வளர்ச்சிக்குப் பதிலாகத் தான் காட்டிய மாறுதலான முனைப்பு.
இன்னொன்று, முதலாளித்துவம் சோஷலிசத்தின் கடமைகளில் பல விஷயங்களை உள்வாங்கிக்கொண்டு விட்டது. ஒன்று, திட்டமிட்ட பொருளாதாரம். மற்றது, மக்களுக்கான சோஷியல் இன்ஷியூரன்ஸ் திட்டம் . சுரண்டல் மூலமாகவே மறைமுக நன்மைகளைப் பெற்று வந்த ஒரு பாரம்பரியம் மனித நேயமே வேண்டாமென்று சொல்லி விட்டது.தனி மனிதன் நன்றாகக் கவனிக்கப்படுவதால் அவனுக்கு மற்ற விஷயங்களைப் பற்றிக் கவலையில்லை.
மார்க்சியத்தின் எதிர்காலம் எப்படி?
மார்க்சியம் காலத்திற்கேற்றபடி வளர்க்கப்படவேண்டும். மார்க்சிய சிந்தனையின் பிரயோகம் இல்லாமல் சமூக ஒடுக்குமுறைகள், சுரண்டல் முறைகளை அழிக்கமுடியாது. ஒடுக்குமுறைகளையும் சுரண்டல் முறைகளையும் பயன்படுத்தி வளரும் நிறுவனங்கள் மார்க்சியச் சிந்தனையை ஊக்குவிக்கப் போவதுமில்லை. ஆனால், மார்க்சியம் ஒரு முக்கியமான இன்டலெக்சுவல் இயக்கமாக இருக்கும். அதனைப் புதிய சூழலுக்கேற்ப புதிய முறையில் சிந்திக்கவேண்டும். மார்க்சியம் தொடர்ந்து மனித விமோசனத்திற்கான இலக்குகளைக் காட்டுகிற அளவு தத்துவமாக நீடிக்கும்.இதுவே என் கருத்து.
சமஸ்கிருதம் உருவாக்கப்பட்ட மொழியே
இலங்கையின் முதல் குடியேறிகள் – தொல்குடிகள் யார்? இன்றைய அதன் அரசியல் சிக்கலுக்கு என்ன தான் தீர்வு? தனி ஈழம் ஒன்று தானா அல்லது வேறு இடைப்பட்ட தீர்வுகள் சாத்தியமா ?
நீங்கள் கேட்கிற பாணியில், தொல்குடிகள் யாரோ அவர்களுக்குத் தேசத்தை விட்டு விட்டுப் பேசாமல் இருந்துவிட வேண்டும் என்கின்ற தொனி இருப்பது போல் தெரிகின்றது. அது அபாயமற்ற தீர்வு என்று நான் நம்பவில்லை. அப்படிப் பார்த்தால் அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரையில் பழங்குடிகளை அழித்துத் தான் வந்திருக்கின்றது வளர்ந்திருக்கின்றது. இப்படி வாதம் செய்பவர்கள் இருக்கின்றார்கள். இந்த வாதம் எனக்கு உடன்பாடில்லை. எங்களுக்குப் பிரச்னை இருக்கின்றது. அதை எப்படித் தீர்க்கவேண்டும் என்பது தான் முக்கியம். யார் முதலில் யார் இரண்டாவதாக வந்தார்கள் என்பது பிரச்னையில்லை.
அந்த நாட்டில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், பழங்குடிகள் வாழ்கிறார்கள். எல்லோருக்கும் அது தாய்நாடு. அதில் தங்களுக்கென்று பண்பாட்டுப் பாரம்பரியங்களைத் தோற்றுவித்திருக்கின்றார்கள். அப்படிப் பார்க்கிற நிலைமையில் இந்தப் பிரச்னை தோன்றிய அளவில் நம்மிடம் தீர்வும் இருக்கின்றது. ஒருமுகப்பட்ட இலங்கையில் தமிழ் மக்களுடைய அரசியல் சாசன நிலைமை. ஆட்சி நிர்வாக அதிகாரம் – இந்தப் பிரச்னை சுமுகமாகத் தீர்க்கப்படுகின்றபோது எல்லாமே சுமுகமாகிவிடும். இவ்வளவு தான் இந்தியாவில் இருந்து கொண்டு நான் சொல்ல முடியும்.
இலங்கையில் கடைப்பிடிக்கப்படும் சிங்களவரின் பௌத்தத்திற்கும் தமிழரின் சைவ சித்தாந்தத்திற்கும் இரு சாராரின் முரணிய எதிர் எதிர் நிலைப்பாடுகளுக்கும் ஏதேனும் தொடர்புண்டா? அல்லது இவை முழுக்க முழுக்க இனவாதத்தை மட்;டுமே சார்ந்தவையா?
இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை சைவ சித்தாந்த மேலாண்மை என்பது யாழ்ப்பாணத்தில் மாத்திரம் தான் வித்தியாசம். என்னவென்றால் யாழ்பாணச் சைவ சித்தாந்தம், சமஸ்கிருதச் சார்புடையது. தமிழ்நாட்டுச் சைவ சித்தாந்தம், மெய்கண்டார் வழியில் தமிழ்ச் சைவ சித்தாந்தம். தமிழ் பேசுகின்ற பிராந்தியம் யாழ்ப்பாணம் மாத்திரமில்லை. இலங்கைத் தமிழர்களில் 9 சிறு சிறு பிரதேச வலயங்களைச் சேர்;ந்தவர்கள் இருக்கின்றார்கள். யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், மேற்குக்கரை, முஸ்லிம் பகுதி, மலையகம், இப்படி எல்லாம் சேர்ந்தது தான் இலங்கைத் தமிழினம்.
இவர்களில் பெரும்பாலான மக்கள் வடகிழக்குப் பகுதிகளில் வாழ்வதால் பிரச்னையும் வடகிழக்குப் பிரச்னையை மையமாகக் கொண்டு வந்தது யாழ்ப்பாணம் முக்கியம். ஆனால், தமிழர்கள் என்றால் யாழ்ப்பாணத்தவர்கள் மட்டுமல்ல.
பௌத்தத்தைப் பொறுத்தவரை சிங்களவர்கள் நிலையில் இரண்டு அம்சங்கள். 1 தாங்களே பௌத்தம் வளர்வதற்கான சரியான மனிதர்கள். இது மதகுருபீடம் சார்ந்த கருத்து. 2. நாங்கள் சொல்கிற பௌத்தம் தான் புத்தர் சொன்ன ஹீனயான பௌத்தம் என்றும் சொல்கிறார்கள்.
ஹீனயானம் என்கிறீர்களே, ஆனால் கோவில் கட்டி, புத்தர் உருவத்தை வைத்து வழிபடுகிறார்களே, அது எப்படி ஹீனயானமாகும்?
அதாவது தத்துவரீதியான ஹீனயானம் என்பது அவர்கள் வாதம்.நடைமுறையில் மகாயானம் சார்ந்த கூறுகளும் அதில் உண்டு. ஹீனயானத்திற்கும் மகாயானத்திற்கும் தத்துவப் பிரச்னைகள் இலங்கையிலும் உண்டு.ஆனால் அவர்கள் சுயநோக்கில் நாங்கள் தான் சரியான பௌத்தர்கள் என்கிறார்கள். அரசியல் காரணங்களுக்காக இங்கே பௌத்தம் பயன்படுத்தப்படுகி;ன்றது.
இன்னொன்று யாழ்ப்பாணத்தில் இருக்கும் சைவ சித்தாந்தத்தை மன்னாரிலோ மட்டக்களப்பிலோ போய்ச் சொல்லமுடியாது. யாழ்ப்பாணத்தை வைத்துக் கொண்டே பிரச்னைகளைப் பார்ப்பதாலும் எங்களுக்குப் புதிய புதிய பிரச்னைகளும் உண்டாகின்றன.
அப்படியென்றால் சைவ சித்தாந்தம் இவர்களை இணைக்கவில்லை. ‘தமிழர்’ என்கிற அடிப்படையில் தான் இவர்கள் இணைகிறார்கள்.
அது நிச்சயம். தமிழர்களாக இருக்கும் தன்மையும் தமிழ் பேசுபவர்களாக இருக்கும் தன்மையும் தான் (அதாவது முஸ்லிம்களையும் சேர்த்து) இவர்களை இணைக்கின்றனவே தவிர சைவ சித்தாந்தம் அன்று.
திறனாய்வாளர்கள் என்று நீங்கள் எடுத்திருக்கும் துலாக்கோலில் இன்றைய தமிழகத்துக்குப் படைப்பாளிகளில் எவர் எவர்க்கு எடை அதிகம்? முன்பே இந்தக் கேள்விக்குப் பலமுறை பதில் சொல்லியிருக்கின்றீர்கள். இருந்தாலும்…
நான் ஒரு இலக்கிய வரலாற்றாசிரியனாகத் தான் படைப்பாளிகளைப் பார்க்கின்றேன். வரலாறு எழுதுபவன் தனக்கு வேண்டியவர்களைப் பற்றியே மட்டுமே சொல்லி மற்றவர்களை விட்டு விட இயலாது. கம்பனும் இருந்தான். ஓட்டக்கூத்தனும் இருந்தான். அப்படித்தான் எழுத முடியும். கம்பன் குரூப் ஒட்டக்கூத்தனை ரிப்போர்ட் பண்ணாவிட்டால் எப்படி இருக்கும்? அல்லது ஒட்டக்கூத்தன் குரூப் கம்பனை விட்டு விட்டால் எப்படி இருக்கும்?
இந்தச் சமூகத்தில் பல்வேறு கருத்துநிலைகள், போராடுகின்ற சூழல் உண்டு. அவற்றைப் பிரதிபலிக்கும் எழுத்தாளர்கள் உண்டு. தங்கள் தங்கள் கருத்து நிலைகளில் நின்று அவற்றைச் செம்மையாகச் சொல்கிறவர்கள் உண்டு. அப்படிப் பார்க்கும்போது 3,4 வகையான குரூப் இருக்கின்து. அவர்கள் எல்லோரும் தான் நன்றாக எழுதுகின்றார்கள். அப்படித் தான் நான் பார்க்கிறேன்.
70 களில் காணாத, 80 களில் காணாத புதிய உற்சாகம், இலக்கியம் பற்றிய வாத விவாதம் இப்போது நடைபெறுகின்றது. இன்றைக்குத் தமிழகத்தின் வெகுஜனப்பண்பாட்டுச் சாதனங்கள் அமைகிற சூழலில் காத்திரமான இலக்கியம் பொதுஜனப் பத்திரிகைகளில் வராது.இன்றைய தமிழகத்தில் சீரியஸ் கல்ச்சருக்கும் மாஸ் கல்ச்சருக்கும் உள்ள பிரிகோடு மிகவும் தெளிவாகத் தெரிகின்றது.
ஆரியர், திராவிடர், வேளாளர் , தலித் என்னும் தத்துவச் சிக்கலில் உங்கள் நிலைப்பாடு என்ன ?
ஆரியர்,திராவிடர் என்பதை நான் தத்துவச் சிக்கலாகக் கொள்வதில்லை. மொழிக்குடும்பங்களை வைத்துக் கொண்டு நாங்கள் அவர்கள் என்று வரையறை செய்ய இயலாது என்று வரலாற்றாசிரியர்கள் சொல்லியிருக்கின்றார்கள். இந்த மொழியும் அந்த மொழியோடு சம்பந்தப்படாமல் இல்லை. அந்த மொழியும் இந்த மொழியோடு சம்பந்தப்படாமல் இல்லை. ஆனால், Historiography காரர்கள் இவர்களைப் பிரித்துப் பார்ப்பது தவறு. பிழை என்று எழுதியிருக்கின்றார்கள்.
வேளாளர், தலித் என்பது தென்னிந்திய வரலாற்றை எடுத்துக் கொண்டால் – 19 ஆம் நூற்றாண்டு முதல் படிப்படியாக சமூகப் பிரக்ஞை பற்றிய வளர்ச்சி சம்பந்தப்பட்ட மக்களிடையே வளர்ந்து கொண்டே போகிறது. இது ஒரு காலத்தில் பிராமணர்கள், வேளாளர்கள் போன்ற மேல்மட்ட மக்களிடையில் தான் இருந்தது. ஜனநாயக மயமாக்கத்தின் விஸ்தரிப்பு நேர்கிறபோது அதை விளங்கிக்கொள்கிற ஜனநாயகப் பண்பாடு இல்லையென்றால் அதனால் சிக்கல் வருகிறது. அதற்கு மேல் என்னைக் கேட்காதீர்கள்.
தமிழ், சமஸ்கிருதம் ஆகிய தொல் மொழிகள் இரண்டினுள் தமிழ் மட்டும் வாழும் மொழியாக இருக்க, சமஸ்கிருதம் ஏன் பேச்சு வழக்கிலிருந்து செத்தொழிந்து வி ட்டது? இதற்குப் பிராமணர்கள் மட்டுமே காரணமா ?
சமஸ்கிருதம் என்றைக்குமே பேச்சு மொழியாக இருந்ததில்லையே. அது உருவாக்கப்பட்ட மொழி . சடங்குகளுக்காகவும் இலக்கிய நோக்கங்களுக்காகவும் செம்மைப்படுத்தப்பட்டுப் பயன்படுத்தப்பட்ட மொழி. சாதாரணமாக பிராகிருதம் தானே பேச்சு மொழி. அதாவது சமஸ்கிருதத்தில் வேதங்கள் ஓதவேண்டும். அதைச் செய்யவேண்டும். இதைச் செய்யவேண்டும் என்று சில விதிமுறைகளைச் சொல்லும்போது தானே அந்த மொழி வரும். சமஸ்கிருத நாடகங்களிலேயே பிராகிருத மொழி தானே பேசப்படுகின்றது.
அப்படியென்றால் அதாவது அது எழுத்து மொழி மட்டும் தான் என்றால் சிலர் மாநாடுகள் கூட்டி அந்த மொழியில் பேசியதாகச் செய்திகள் வருகின்றனவே. அது எப்படி?
எல்லாம் சரி . நீங்கள் சமஸ்கிருதத்தில் நியூஸ் கேட்டுப் பாருங்கள். சமஸ்கிருதத்தில் ஸ்லோகங்கள் கேட்டுப் பழகினவர்கள் காதுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். ஆக இதெல்லாம் வருவதற்குக் காரணம் identity disturbance தான்.
ஆனால், சமஸ்கிருதம் எந்தக் காலத்திலும் பேச்சுமொழியாக இருந்ததில்லை. அது பண்டிதர்களால் உருவாக்கப்பட்ட மொழி. அது இந்திய நாகரீகத்தின் எல்லாக் காலங்களிலும் இருந்து வந்துள்ள மொழி .அதை மறுப்பதற்கில்லை.
செம்மைப்படுத்திச் பேசுவது சாதாரணமாகப் பேசுவது இதெல்லாம் hierarchical society இருக்கத் தான் செய்யும்.
சமஸ்கிருதம் உருவாக்கப்பட்ட மொழி மட்டும் தான். பேச்சு மொழியாக என்றைக்குமே இருந்ததில்லை என்றால் இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் அதன் தாக்கம் தெரிவதும் அது எல்லா மொழிகளோடும் பின்னிப் பிணைந்திருப்தும் எப்படிச் சாத்தியமாகி இருக்கும்?
ஒரு காலகட்டத்தில் அது தான் முக்கியமான lingua Franca , பண்பாட்டு மொழியாக இருந்தது. அதன் காரணமாக இப்படி நேர்ந்திருக்கின்றது என்று சொல்லலாம். 22 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலம் பொதுவான மொழியாக இந்தியாவில் இருந்ததா என்று கேட்கத் தான் போகிறார்கள். அதே போல் நினைத்துக் கொள்ளுங்கள்.
ஆனால் ஆங்கிலம் எங்கும் பேச்சு மொழியாகவும் இருக்கிறதே ?
அது தான். சமஸ்கிருதம் ஒரு குறிப்பிட்ட மதப் பாரம்பரியத்தோடு சம்பந்தப்பட்டதாகவும் அந்த மதத்தின் உயர் அம்சங்களைப் பேணுவதற்காகவும் ஒரு இலக்கிய மொழியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. அதை இந்தியா முழுவதற்கும் ஒரு பண்பாட்டு மொழியாக வளர்த்திருக்கின்றார்கள்.
இன்னொன்று சமஸ்கிருத இலக்கியங்களெல்லாம் வட இந்தியாவில் மட்டுமா எழுதப்பட்டன,? முக்கியமானவை தென்னாட்டில் தானே எழுதப்பட்டன. வட இந்திய வளர்ச்சிக்கும் சமஸ்கிருத வளர்ச்சிக்கும் தமிழகத்தின் பங்கு மிகக் கணிசமானது. அப்படிப் பார்க்கும்போது எல்லாப் பகுதிகளின் பங்களிப்பும் சமஸ்கிருதத்தி;ல் உண்டு. அது ஒரு குழுவுக்கு மட்டும் சம்பந்தப்பட்டது என்று நான் நினைக்கவில்லை. சமஸ்கிருதம் பேசுவதாலேயே அது எங்களுக்குத் தான் சொந்தம் என்பதும் உண்மையில்லை. அதற்கும் மற்ற மொழிகளுக்கும் தொடர்பில்லை என்றும் சொல்லமுடியா. சங்கரர் யார்? நம்மாழ்வார் யார்? இந்தியப் பக்தி இயக்கத்தின் இமேஜ் யாருடையது?
சிலருடைய வாதம் என்ன என்றால் சமஸ்கிருதத்தை வைத்துக் கொண்டு தான் இந்திய ஒருமைப்பாட்டை ந ிலைநிறுத்த முடியுமாம். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?
அதாவது வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் சரி. ஒற்றுமையில் வேற்றுமைகளை மறைக்க முயல்வது சரியில்லை. இது தான் என் பதில்
தத்துவம், கலை, இலக்கியம், இலக்கணம், இசை ஆ கியவற்றில் சமஸ்கிருதமே தமிழுக்கு நன்கொடை வழங்கியுள்ளது என்கின்ற வாதம் உங்களுககு உண்டா ? நவீன எழுத்தாளர்களில் நிறையப் பேருக்கு இந்தப் பார்வை இருக்கின்றது. இது சரியா ? பெயர்களைக் குறிப்பிட விரும்பவில்லை.
சொல்லவேண்டாம். நான் சொல்கிறேன்.அதாவது இந்தியாவின் பண்பாட்டை காய்தல் உவத்தல் இல்லாமல் ஆராய்கிறபோது எரிந்த கட்சி எரியாத கட்சி ஆடாதபோது இந்தியப் பண்பாடு என்பது இரண்டு பெரும் பாரம்பரியங்களை உள்ளடக்கியது என்பது தெரியவரும். அந்தப் பாரம்பரியங்களின் குறியீடாக அவற்றின் வெளிப்பாடாக சமஸ்கிருதமும் தமிழும் அமைந்திருக்கின்றன. தமிழ்ப்பாரம்பரியத்தின் சில அமைப்புக்கள் இங்கே காணப்படுகின்றன. அகம், புறம் பண்பாட்டுப் பாரம்பரியம். சூழ்நிலைச் செய்யுள் மரபு, திணை மரபு இவையெல்லாம் தமிழின் சொத்து. கதா சப்தாதி என்கின்ற நூல் பிராகிருதத்தில் இருப்பதால் அது சமஸ்கிருதம் என்று சொல்லிவிடமுடியாது.
இரண்டு பண்பாடுகள் இருக்கின்றன. ஒன்றை நிராகரிப்பதால் மற்றொன்று வாழ முடியாது. இரண்டுமே முக்கியம். இந்தியாவின் ஒருமைப்பாட்டை இந்த இரண்டு பண்பாடுகளையும் இணைத்தே பார்க்கவேண்டுமே தவிர எந்த ஒரு பண்பாட்டின் மேன்மை மூலமாகவும் அதைக் காணமுடியும் என்று நான் ஒப்புக் கொள்ளமாட்டேன்.
நீங்கள் சொல்வது peaceful coexistence
ஆமாம்.இரண்டு பாரம்பரியமும் இருக்கவேண்டும்.இந்த இரண்டும் சிந்துச் சமவெளி தோற்றத்திலேயே இருக்கின்றன. நிச்சயமாக தமிழுக்கும் சமஸ்கிருதத்தி;ற்கும் இலக்கண மரபுகள் வேறு வேறு. தமிழ் நாட்டுக்கென்று ஒரு இசை மரபு இ;ருந்துள்து. இசை வடமொழியைச் சார்ந்தது மட்டும் தானா என்று அறிவதற்கு எங்களிடம் சான்றுகள் இல்லை.
கர்நாடக இசை என்பது தமிழ் இசை தானா ? அல்லது வேறா?
நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். கர்நாடக இசை என்பது தென்னிந்தியாவின் சகல பிரதேசங்களுக்கும் பொதுவான இசை. தமிழிலிருந்து தான் கர்நாடக இசை வந்தது என்பதை நாங்கள் மட்டும் சொன்னால் கர்நாடகமும் தெலுங்கும் மலையாளமும் அதை ஒப்புக்கொள்ள வேண்டும். அந்த நிலவரம் எனக்குத் தெரியாது .அந்த வித்வான்கள் எப்படிச் சொல்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியாது. நாங்கள் மட்டும் ‘பண்’ ணிலிருந்து தான் கர்நாடக இசை வந்ததென்று சொன்னால் போதாது.
தென்னிந்தியா முழுவதற்கும் ஏன் இப்படி ஒரு பொதுவான இசை வந்தது என்பது ஒரு சரித்திரச் சம்பவம். முஸ்லிம்கள் வந்து கையேற்றுக் கொண்டது சங்கீதம். கட்டக்கலையை அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை. கலாச்சாரத்தை ஏற்கவில்லை. ஓவியம் இல்லை.அவர்கள் இசையை மட்டுமே எடுத்துக் கொண்டார்கள். இன்றைக்கும் இந்துஸ்தானி இசையில் முஸ்லிம்கள் பங்களிப்பு மிகப் பெரியது. அதனால் இசை மரபு மாறுகிறது. அந்த மாற்றத்தின் பின்புலத்தில் தான் சதுர் தண்டிகை பிரகாசத்தையும் சங்கீத ரத்னாகரத்தையும் நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.
14 ஆம் நூற்றாண்டிலிருந்து தெலுங்கைப் பிரதானமாகக் கொண்ட ஆட்சி ஒன்று தெற்கில் (விஜயநகரப் பேரரசு) நிறுவப்படுகின்றது. அதன் மூலம் தான் பிற்காலத்தில் கர்நாடக இசை, பரதநாட்டியம் ஆகிய பொதுவான கலைக்கூறுகள் வந்துள்ளன. கட்டிடக் கலையில் கூட ஆந்திரத்தில் நம்முடைய கலை தான். கன்னடத்தில் தான் ஹோய்சலக் கட்டிடக்கலை. ஆக எல்லாவற்றையும் ஒரு சமதளத்தில் நின்று பார்க்கவேண்டும். எனக்கு மட்டும் தான் என்று நமது திருப்திக்காககச் சொல்லிக் கொண்டிருக்கமுடியாது.
தமிழுக்கு ஒரு பெரிய இசை மரபு இருந்தது. அது எப்படி மாறியது என்பதைச் சரியாக இதுவரை விளக்கவில்லை.அந்த வரலாறு இன்னும் தெளிவாகவில்லை.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு ‘வேதாந்தமும் மார்க்சியமும்’பற்றி மிகப் பெரிய தத்துவப் போராட்டமே நடைபெற்றது. எஸ்.ஏ.டாங்கே ஒரு புறமும் தேவி பிரசாத் சட்டோபாத்யாய ஒரு புறமும் நின்றார்கள். நீங்கள் யார் பக்கம் ந ிற்கிறீர்கள் ?
மார்க்சியத்திற்கு ஒரு புதுத் தத்துவப் பலத்தைக் கொடுகக்க் கூடிய வாதமாகவும் அதைப் பார்க்கவேண்டும். மார்க்சியத்தின் பலமான அம்சங்கள் என்னவென்றால் அதைக் கொண்டு பிற விஷயங்களை அணுகலாம். அறியலாம். மார்க்சியத்தைக் கொண்டு வேதாந்தத்தின் வளர்ச்சியை நாம் துல்லியமாகப் பார்க்கலாம். வேதாந்தத்தின் ஜனநாயகப் பண்புகள் யாவை அல்லாத பண்புகள் யாவை என்றெல்லாம் மார்க்சியத்தின் மூலம் பார்க்கலாம். ஆனால் வேதாந்தக் கண்கொண்டு மார்க்சியத்தைப் பார்க்கலாமா? அந்த வாதத்தை அப்படியும் பார்க்கவேண்டும் என்று சொல்கிறேன். ஏன் என்றால் வேதாந்தம் ஒன்று தானா! பல இருக்கின்றன. மார்க்சியமும் அப்படித்தான். பல மார்க்சியங்கள் இருக்கின்றன.
ஆனால் எல்லா மார்க்சியமும் மெட்ரியலிஸ்டிக் எல்லா வேதாந்தமும் ஸ்பிரிச்சுவலிஸ்ட்டிக்
அப்படி நீங்கள் பார்க்கக்கூடாது. அப்படி அதை reduce பண்ணாதீர்கள். மார்;க்சியம் மனிதனின் ஆத்ம உயிர்ப்புக்கு இடம் கொடுக்கவில்லை என்று தயவு செய்து சொல்லாதீர்கள். ஏனென்றால் spiritualism என்பது. is a matter of the human spirit .அதாவது, மனித உயிர்ப்புக்கு மார்க்சியம் கொடுத்த அளவு முக்கியத்துவம் எந்த மதமும் கொடுக்கவில்லை என்று நான் சொல்வேன்.
spiritualism என்கிறபோது இந்தியப் பாரம்பரியத்தில் ஆன்மீகம் என்று சொல்லிவிட்டோம். அதை ஏன் ஆன்மா என்று எடுத்துக் கொள்கிறீர்கள். மனித உயிர்ப்பு (Human spiri)என்று ஏன் எடுக்கக்கூடாது. மார்க்சியம் என்பது வெறுமனே மெட்டீரியலிசம் அல்ல.அது லோகாயதவாதத்திற்குச் சரி, மார்க்சியத்திற்குச் சரியில்லை.
வேதாந்தம் spirit ஐ abstract ஆக அல்லவா சொல்கிறது? Universal spirit என்கிறது வேதாந்தம்.
சரி அப்படி ஏன் சொல்கிறது. நான்கு வேதங்களின் முறைமை என்ன? உபநிஷதங்களின் முடிவு என்ன? அவற்றையெல்லாம் வேதாந்தம் என்று சொல்லும்போது சேர்த்துப் பார்க்கவேண்டும்.
நான் என்ன சொல்கிறேன் என்றால் இரண்டு நிலைகளை வைத்துக் கொண்டு ஒன்றுக்கொன்று சரியா பிழையா என்று பார்ப்பது சரியல்ல. மார்க்சியத்தை acculturate பண்ணுவதற்கான ஒரு வாதம் தான். வேதாந்தமும் மார்க்சியமும் என்கிற வாதம். அது வரைக்கும் சந்தோஷம் தான். அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். இதில் எந்தப் பக்கம் என்பது எரிந்த கட்சி, எரியாத கட்சி.
அந்தக் காலத்து மார்க்சிஸ்ட் கலந்துரையாடலில் பாருங்கள். Levels of discourse இருக்கும். கருத்தாடல் மட்டங்கள் ஒரு சமூகத்திலேயே ஒரே ஒரு உற்பத்தி முறை இல்லை. நாலைந்து உற்பத்த முறைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று dominant ஆக இருக்கின்றது.இது தான் சமூக உருவாக்கத்தின் அடிப்படைத் தத்துவம் ஆனபடியால் do not be dogmatic.
இந்தியாவைப் பொறுத்தமட்டும் பௌத்த, சமண மதங்களை அழித்துவிட்டு சைவ, வைணவம் ஆதிக்கம் செலுத்துகின்றன.
பொருள் முதல்வாதிகள் ஏன் மீண்டும் பௌத்த, சமணங்களுக்குத் திரும்பலாகாது ?
பௌத்தமும் சமணமும் பொருள் முதல்வாதம் பேசியமதங்கள் அல்ல. பௌத்தத்தையும் சமணத்தையும் அழித்ததாகச் சொல்கிறீர்கள். நாங்கள் அவற்றை உள்வாங்கிக் கொண்டோம். யாழ்ப்பாணத்தில் சைவத்திற்குப் பெயர் அருகன் உணவு. சைவச் சாப்பாடு என்பது சமண உணவு. எங்களுக்கு மிகப் பெரிய இலக்கணங்களை எழுதியது பௌத்தமும் சமணமும் தான். கம்பன் காலத்திலேயே எங்களுக்கு ஒரு பவணந்தி தான் தேவைப்பட்டது . எங்கே அழித்தோம்.
உள்வாங்குவது என்பதும் ஒரு விதமான அழிப்பது தானே. அனைத்து அழிக்கிற உபாயம் அது
தேவாரம் எல்லாம் பின்னுக்குத் தான் தொகுக்கப்பட்டது. அவை தொகுக்கப்படாமல் போயிருந்தால் என்ன நிலைத்திருக்கும்? ஐம்பெரும் காப்பியம் மட்டுமே இருந்திருக்கும். அதெல்லாம் ஜைனர்களுடையது தானே. ஓர் இலக்கிய வரலாற்று ஆசிரியர் என்கின்ற முறையில் சொல்கிறேன். பௌத்த, சமணத்தை ஒழித்துவிட்டோம் என்பதை ஏற்பதற்கில்லை.
திருஞான சம்பந்தர், சமணர்களைக் கழுவில் ஏற்றினார் என்று சரித்திரம் சொல்கிறதே ?
அது hageography . அவர்கள் சமயத்தில் அவர்களுக்குச் சாதகமாகச் சொல்வார்கள். இவர்கள் சமயத்தில் இவர்களுக்குச் சாதகமாகச் சொல்வார்கள். அவை சரித்திரம் அல்ல. புகழ்ந்த வரலாறுகள், வரலாறுகள் அல்ல. கழுவில் ஏற்றியிருக்கலாம். இவ்வளவு காலத்திற்குப் பிறகும் புரட்டஸ்டாண்டுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் சண்டை நடக்கவி;ல்லையா? இங்கிலாந்தில் இல்லையா? இலங்கையில் இல்லையா? எங்கு இல்லை. அதைச் சமயச்சண்டை என்று ஏன் சொல்லவேண்டும்?
இந்தக் கேள்வியே ஏன் வருகின்றது, என்றால் இந்தியா புத்தரும் மகாவீரரும் பிறந்த நாடு. இங்கே புத்தரின் மதமும் இல்லை. மகா வீரரின் மதமும் இல்லை. இந்து மதம் இரண்டையும் ஜீரணம் பண்ணியிருக்கின்றது.
அதற்குக் காரணம், நீங்கள் சொல்கிற இந்து மதம் ஒன்றல்ல. இந்து மதம் என்று எதைச் சொல்கிறீ;கள்- சைவத்தையா, வைஷ்ணவத்தையா, சாக்தத்தையா? எல்லாம் சேர்ந்தது தான் இந்து மதம். அதாவது நீங்கள் சொல்கிற இந்து மதம் என்று ஒன்று இல்லை.It is non-existent. இந்து மதம் என்பதே உருவாக்கிச் சொல்லுவது தான். சைவன், வைஷ்ணவனை ஏற்றுக்கொள்ளமாட்டான். வைஷ்ணவன், சைவனை ஏற்றுக்கொள்ளமாட்டான்.
ஆனால், எல்லாரும் சேர்ந்து பௌத்தனையும் சமணனையும் எதிர்த்தார்கள். அழித்தார்கள்
(சிரிக்கின்றார்). அது வேறு. அதனால் நாம் புனிதர்கள் ஆகவில்லை. வெள்ளையர் காலத்தில் -colonial period இல் மேல் நாட்டு ஆராய்ச்சியாள்களாலும் activist அன்னி பெசன்ட் போன்ற களாலும் இந்து மதம் பிரக்ஞை பூர்வமாகக் கட்டப்பட்டது. அதை மறந்துவிட்டார்கள். அவர்கள் தான் இந்து மதத்தை mystify பண்ணினார்கள்.
முன்பே இந்தக் கேள்வியின் சாயலில் சில கேள்விகள் க ேட்டாயிற்று. இருப்பினும் நேரடியாக ஒரு கேள்வி. பெரியாரியத்தில் உங்கள் நோக்கில் கொள்ளத்தக்கன யாவை? தள்ளத்தக்கன யாவை ?
பெரியார் என்கின்ற வரலாற்று நிகழ்வு – phenomenon எவ்வாறு தோன்றியது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். தேசியப் போராட்டத்தின்போது இங்கே தோன்றிய சமூக முரண்பாடுகளின் உக்கிரமான தன்மைகளை உணர்ந்து கொள்ளாததனாலும் அந்தச் சமூக முரண்பாடுகள் தீர்க்கப்படாத வகையிலும் சமூக விடுதலைக்கு வேண்டிய சில அம்சங்களுக்காகப் போராடவேண்டி வந்தது. அவர் கடைசி வரை அரசியல்வாதியாக பொலிடிகல் ஆக்டிவிஸ்ட் ஆக அவர் மாறவில்லை. சோஷியல் ரிஃபார்மராகவே இருந்தார்.
பெரியார் என்கிற வரலாற்று நிகழ்வை நாங்கள் புரிந்து கொள்ளாத வரையில் தமிழக வரலாற்றையும் எதிர்காலத்தையும் தரிசிக்க இயலாது.
பெரியார் என்கிற தத்துவத்தில் பகுத்தறிவு இருக்கின்றது. நாத்திகம் இருக்கின்றது. அதேநேரத்தில் பெண் விடுதலைக்காகவும் போராடினார். பெரியாரைச் சமூக ஓட்டத்திற்கு அப்பாலும் புறம்பாகவும் பார்ப்பது தவறு.
இந்தக் கேள்வியை இப்படிக் கேளுங்கள். ஏன் இன்றைக்குப் பெரியாரை நாம் நினைக்கிறோம்? ஏன் பெரியார் முக்கியமாகத் தெரிகிறார்? இப்படிக் கேட்கலாமே. அவர் நினைக்கப்படுவதற்கான காரணங்கள் இருக்கின்றன.
இன்னொரு நெருக்கமான கேள்வி. மார்க்சியத்தையும் பெரியாரிசியத்தையும் கருத்தாக்க அடிப்படையில் இணைத்தல் அதாவது synthesize செய்தல் சாத்தியமா ?
இன்று காலையில் கூட நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர்கள் சொன்னார்கள். இந்திய வரலாற்றில் காந்தி ஒரு முகத்தைக் காட்டினால், பெரியார் இன்னொரு முகத்தைக் காட்டுகிறார். பூலே மற்றொரு முகத்தைக் காட்டுகின்றார். அப்படிப் பார்ப்பது நல்லதல்ல. அந்தந்தக் கொள்கைகளைப் பின்பற்றுகின்றவர்கள். அப்படித் தான் பார்க்கிறார்கள். அதை நாம் விளங்கிக் கொள்ளவும் வேண்டும்.
பெரியாரியம்,அதாவது பெரியார் பேசியவை, எழுதியவை மார்க்சிய வளர்ச்சிக்கு முரணானவையாக இன்று காணப்படவில்லை என்று மட்டும் சொல்லமுடியும்.
————–
நேர்காணல் : கல்பனாதாசன்
(இந்நேர்காணல் புதிய பார்வை 16 – 31 அக்டோபர், 1-15 நவம்பர் 1997 இதழ்களில் வெளிவந்தது.)
நன்றி : புதிய பார்வை

Wednesday, July 6, 2011

ஜூலை 21 அறைகூவல்

BSNL Workers Allince
ஜூலை 21 அறைகூவல் திரளாக பங்கேற்பீர்
BSNLWA சார்பில் NFTE ,SNATTA, BSNLWRU, ATM, AIBCTES ,BSNLEC, BSNLES ஆகிய சங்கங்களின் பொதுச் செயலர்கள் வருகிற ஜூலை 21 அன்று கீழ்கண்ட கோரிக்கைகளை தீர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்/தர்ணா, கருப்பு சின்னமணிதல் அறைகூவலை விடுத்துள்ளனர்.
1. விரிவாக்கம், பராமரிப்பிற்கு தேவைப்படும் கேபிள், தொலைபேசி, மோடம், டிராப் ஒயர் பிற உபகரணங்களை தடையின்றி கொள்முதல் செய்து தல மட்ட்த்திற்கு வழங்குக
2. திரு தயாநிதி மாறன் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட 323 இணைப்புகளுக்கு (ISDN) பொறுப்பான அதிகாரிகளின் மீது விசாரணை நடத்திடுக
3. பதிவு செய்யப்பட்ட சங்கங்களுக்கு தொழிற்சங்க வசதிகள் –ஒன்றுக்கு மேற்பட்ட சங்க அங்கீகாரம்
4. வீ ஆர் எஸ் மற்றும் சி ஆர் எஸ் கூடவே கூடாது
5. அவுட்சோர்சிங் முறைதனை நிறுத்துக

தொழிலாளர் கூட்டணியின் அறைகூவலை மாவட்ட/கிளை மட்டங்களில் சிறப்பாக நட்த்திட வேண்டுகிறோம்.
தோழமையுடன்,
R.பட்டாபிராமன் G.P.பாஸ்கரன் A. கலியபெருமாள்
NFTE_BSNL BSNLWRU SNATTA
J.ஆரோக்கியராஜ J.பிரசாத் R. துரைசாமி
BSNL ATM AIBCTES BSNLEC
4-7-11

Thursday, April 7, 2011

அன்னா ஹசாரே எனும் போராளி



இந்த சம கால சமூகப் போராளியைப் பற்றி..,

சமகால இந்திய சமூகப் போராளிகளில் குறிப்பிடத்தக்கவரான ஹசாரே, தனது மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ராலேகாவ் சித்தி என்ற ஊரை மேம்படுத்தி இந்தியாவின் ‘மாதிரி சிற்றூர்’ என்ற நிலைக்கு உயர்த்தியவர். இந்த அரும்பணிக்கு, 1992-ல் பதமபூஷன் விருதை வழங்கி கெளரவித்தது இந்திய அரசு.

ஆர்.டி.ஐ. எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு பின்புலமாக இருந்தவர், இப்போது ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளார். இவர் கடந்து வந்த பாதை…

* கிசான் பாபுராவ் ஹசாரே. 1940-ம் ஆண்டு ஜனவரி 15-ல் மகராஷ்டிராவில் பிறந்த இவர், ‘அன்னா ஹசாரே’ என்று அழைக்கப்படுபவர்.

* ஐந்து ஏக்கர் நிலத்துக்குச் சொந்தமான குடும்பத்தில் பிறந்த ஹசாரே, கடுமையான நிதி நெருக்கடிச் சூழலால், ஏழாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டவர்.

* இந்திய ராணுவத்தில் வாகன ஓட்டுநராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி மற்றும் ஆச்சரியா வினோபா பாவே ஆகியோரின் தாக்கத்தால் சமூகப் போராளியாக உருவெடுத்தார்.

கிராம மேம்பாட்டுப் பணி…

* ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, 1975-ல் மகாராஷ்டிராவின் ராலேகாவ் சித்திக்கு வந்தார். முதலில், மது எதிர்ப்பு போராட்ட இயக்கத்தைத் தொடங்கி வழி நடத்தினார். அந்த கிராமத்தில் இருந்து மதுவை அறவே ஒழித்தார்.

பின்னர், கிராம மக்களை ஒன்று திரட்டி, ‘ஷ்ரம்தன்’ என்ற தன்னார்வ தொழிலாளர்கள் அமைப்பைத் தோற்றுவித்தார். ஏரிகளை வெட்டுவது, சிறு அணைகளைச் சரிசெய்வது, குளங்களைத் தூய்மைப்படுத்துவது என நீர் மேலாண்மைக்கு வழிவகுத்தார். இதன் மூலமாக, ராலேகாவ் சித்தியில் தண்ணிர் தட்டுப்பாட்டு தடமின்றிப் போனது.

* மகாராஷ்டிராவில் உள்ள 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நீர்ப் பற்றாக்குறையைப் போக்குவதற்கு உறுதுணை புரிந்தார்.

* தன்னார்வத் தொழிலாளர்களைக் கொண்டே கிராமத்தில் உயர் நிலைப்பள்ளி கட்டுவதற்கு கிராமவாசிகளைத் தூண்டி, அதில் வெற்றியும் கண்டார்.

* 1998-ல் சிவசேனா – பிஜேபி ஆட்சியின்போது, மகாராஷ்டிராவின் சமூக நல அமைச்சராக இருந்த பாபன்ராவ் கோலப் தொடர்ந்த அவதூறு வழக்கில், ஹசாரே கைது செய்யப்பட்டார். மக்கள் கொந்தளித்து குரல் கொடுத்ததன் எதிரொலியாக, பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

தகவல் அறியும் சட்டம்…
* 2000-ன் துவக்கத்தில் மகாராஷ்டிராவில் ஓர் இயக்கத்தைத் தொடங்கினார், ஹசாரே. அதன் பலனாக, அம்மாநிலத்தில் வலுவிழந்து இருந்த தகவல் அறியும் சட்டம் முழு வல்லமை பெற்றது. இதுவே, மத்திய அரசால் 2005-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு அடித்தளமாக அமைந்தது.

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா இயக்கம்…

நடப்பு ஆண்டில் (2011) இந்தியாவில் நாளுக்கு நாள் மலிந்துவரும் லஞ்ச – ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தைத் துவக்கியுள்ளார்.

இதனிடையே, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோருடன் இணைந்து ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ‘ஜன் லோக்பால் மசோதா’ என்ற மாதிரி சட்ட மசோதாவை தயாரித்தனர்.

இது, மத்திய அரசால் தயாரிக்கப்பட்டுள்ள லோக்பால் சட்ட மசோதாவி விட வலுமிக்கதாக இருந்தது. இதில் அம்புட்ஸ்மன் (ombudsman) எனப்படும் நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகை செய்யும் அம்சத்துக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது.

ஆனால், இந்த மாதிரி சட்ட மசோதாவை மத்திய அரசு ஏற்க மறுத்தது. ஏற்கெனவே அரசால் முன்வைக்கப்பட்ட லோக்பால் மசோதாவுக்கான வரைவுப் பணிகளை மேற்கொள்ள வேளாண் அமைச்சர் சரத் பவார் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது.

இந்தச் சூழலில் தான் ஊழல்வாதிகளைக் கடுமையாக தண்டிக்க வகை செய்ய, மத்திய அரசின் லோக்பால் மசோதாவை வலுவாக்கி, அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த 5-ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார், ஹசாரே.

லோக்பால் சட்ட மசோதாவை இயற்றும் பணியில், அரசு பிரதிநிதிகளுக்கு நிகராக குடிமக்களின் பிரதிநிதிகளும் இணைந்து ஈடுபடும் வகையில், கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்பதே அன்னாவின் உறுதியான வலியுறுத்தல்.

Sunday, April 3, 2011

VRS குறித்து அக் 2007ல் வெளியான கட்டுரை

rp vrs

Thursday, March 24, 2011

ஒலிக்கதிர் பிப் 2011

Olikkathir_0211

Monday, March 7, 2011

GPF பிரச்சனை

GPF பிரச்சனை
கடந்த இரு மாதங்களாக GPF எடுப்பதில் ஊழியர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கார்ப்பொரேட் அலுவலகத்தில் GPF நேரடியாக DOTஆல் deal செய்யப்படுகிறது. ஆனால் மாநிலங்களில் BSNL பொறுப்பெடுத்து செய்து வருகிறது. ஊழியர்களிடமிருந்து பெறப்படும் சந்தா, பிற பிடித்தங்களை மாதந்தோறும் 14 ஆம் தேதிக்குள் DOTக்கு மாநில நிர்வாகம் அனுப்பிவிடும். ஊழியர்கள் கோரக்கூடிய GPF முன்பணம் மற்றும் withdrawal க்கான தொகையை கார்ப்பொரேட் அலுவலகத்திலிருந்து பெற்று ஊழியருக்கு பட்டுவாட செய்திடும் நடைமுறை இருந்து வருகிறது. இதற்குரிய தொகையை பின்னர் DOT யிடமிருந்து பெற்று கார்ப்பொரேட் அலுவலகத்திற்கு மாநில நிர்வாகம் அனுப்பி வைக்கவேண்டும்.
இந்த நடைமுறை BSNLன் Cash Flow பிரச்சனை இல்லாதவரை சுமூகமாக போய்க் கொண்டிருந்தது. Cash Flow பிரச்சனையால் கேட்கின்ற GPF தொகையை கார்ப்பொரேட் அலுவலகத்திலிருந்து மாநில நிர்வாகங்களால் பெறமுடியாமல் ஊழியர் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
உதாரணமாக தமிழகத்தில் ஊழியர்களிடமிருந்து பெறப்படும் 22 கோடி அளவிலான தொகையை DOTக்கு கட்டிவிட்டு ஊழியர்களுக்கு சராசரியாக தேவைப்படும் 15 கோடியை மாநில நிர்வாகம் கார்ப்பொரேட் அலுவலகத்திலிருந்து பெறவேண்டும். பிறகு DOTயிடமிருந்து அதைப்பெற்று ஆனால் அங்கிருந்து முழுமையாக பெறமுடியாமல் போவதால் பிரச்சனை உருவாகியுள்ளது. நமது தலைமையை இப்பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டியுள்ளோம். 22 கோடி GPF வரவு 15 கோடி பட்டுவாட மீதி 7 கோடி net மட்டும் DOTக்கு கட்டுகிறோம் என்றநிலை இருந்தால் Cash Flow பிரச்சனை சற்று குறையும். பட்டுவாடா தட்டுப்பாடும் நீங்கும் என கருதுகிறோம். உரிய மட்ட்த்தில் இப்பிரச்சனையை எடுத்து தீர்க்க முயற்சித்து வருகிறோம்
7-3-10

Wednesday, February 9, 2011

Thursday, February 3, 2011

கலங்காதே தோழா தோல்வியும் உரமூட்டும்!

கடந்து வந்த நாட்களில் அஞ்சாமல் அலுப்பில்லாமல் நீ செய்திட்ட பணிகள் ஏராளம். அப்பணிகள் தேர்தலால் முடிந்து போகவில்லையே! தொடர்வதற்கு உன்னை வரித்துக் கொள்.

தொழிற்சங்க வேலையில் ஒரு பகுதி மட்டுமே தேர்தல். தேர்தலுக்காக மட்டுமே நமது தொழிற்சங்கத்தை நாம் துவக்கவில்லை. அதன் நீண்ட மரபுத் தொடர்ச்சியின் இன்றைய வாரிசுகள் நாம் என்ற எண்ணம் மேலோங்கட்டும். அது மாபெரும் விடுதலைக்கான பாதை. தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கான பாதை. அது தேர்தல் எனும் முட்டுச்சந்துகளில் முடிவதில்லை.

வழக்கம் போல் சுறுசுறுப்பாக உற்சாகத்துடன் செயல்படு; அனைவருக்கும் நன்றி அறிவிப்பை நேரடியாக சென்று சொல். எந்த சக ஊழியரையும் சந்தேகப்பட வேண்டாம். ”எனக்கு வாக்களிக்கவில்லையே கவனித்துக் கொள்கிறேன்” என்றெல்லாம் வாக்குவாதங்களில் இறங்க வேண்டாம்.

தேர்தல் நாளன்று மருத்துவமனையில் இருந்து வலி வேதனை உபாதைகளை பொருட்படுத்தாமல் சலைன் பாட்டிலுடனும் சக்கர நாற்காலியுடனும் வந்து வாக்களித்த பெரு உள்ளங்கள் பரவசமூட்டுகின்றன. அவர்களுக்கெல்லாம் மாநில சங்கத்தின் தாள் பணிந்த வணக்கங்கள்.

ஏராள வேலைகள் முன் நிற்கின்றன. கடமைகளால் காலத்தை எதிர் கொள்வோம். முன்னேற்றங்கள் குறுக்கு வழிகளால் வருவதில்லை. தொழிலாளி வர்க்க உணர்வென்பது வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது. தனி நபர் தாக்குதல்கள் தேவையில்லை. நமது கொள்கை- நிலைபாட்டின் வழி நின்று விவாதத்தை தொடருவோம். BSNL தொழிற்சங்க இயக்கங்கள் வெறுப்பை வெளியேற்றக் கற்றுக்கொள்ளட்டும்.
4-2-2011 நம்பிக்கையுடன், அன்பன் பட்டாபி

Sunday, January 16, 2011

தோழர்களே!
வணக்கம். தேர்தல் களத்தின் பரபரப்பில் இருப்பீர்கள். விவாதம் சூடு பிடித்துள்ளது. பல மாவட்ட சங்கங்கள் தங்கள் வலைப்பூ மூலம் ஏராள அறிக்கைகளை கொண்டு வருவது பாராட்டிற்குரியது. ஆரோக்கியமான விவாத முறையில் நல்ல பயிற்சி பெறுவது தொழிலாள வர்க்க கலாச்சாரமேன்மைக்குதவும்.

தொழிலாளர் பிரச்சனைகள் குறித்தும் நமது துறை குறித்தும் ஆழமான விவாதங்கள் வளர்வது அவசியமானது கூட. தேர்தல் பரபரப்பு முடிந்தபின்னர் நமது வாதங்கள் பிரச்சனை தீர்விற்கு உதவி வருகிறது என நாம் அறியும் போது நமது ஆற்றல் மட்டுமல்ல தொழிற்சங்க சேவை குறித்த தேவையும் நிறைவேறும்.

BSNLEU தங்களின் இயலாமையால் அதன் ந்ண்பர்களை இழந்துவிட்டது. NFTE FNTO சிறு சிதறல்களை பூதாகரமாக்கி அதன் மூலம் தானும் ஏமாந்து தொழிலாளர்களையும் ஏமாற்ற விழைகிறது. தான் சாதித்தவைகளை காட்டி ஓட்டு வாங்க முடியாதென்பது தெளிவான பின்புலத்தில் NFTEயை சிறிதாக சித்தரித்து குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சிக்கிறது. அதன் 6 ஆண்டு இருப்பில் தான் தொழிலாளர் வாழ்வே இருப்பதுபோல் அது பெருமைபட்டுக்கொள்கிறது. வரலாற்றின் இயங்குகதி குறித்து அறியாப்பிள்ளையைப்போல் அது நடந்து கொள்கிறது.

இத்தேர்தலில் NFTEக்கு தொழிலாளர்கள் தலைமை பாத்திரத்தை தர இருக்கிறார்கள். BSNLEU செய்திட்ட தவறுகளை சரி செய்வதும் அடிப்படையான அம்சங்களான BSNL Viability, Pension, Job Security என்ற three essentials மீது காப்புகளை உறுதி செய்வதும் ந்மது பொறுப்பாக அமையும்.