அனைவருக்கும் வணக்கம்
மாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது

Wednesday, July 25, 2012



தகழியின் ’செம்மீன்’ என்ற மகத்தான மலையாள நாவலின் ஆங்கிலப் பதிப்பு வெளியாகி( 1962)  ஐம்பது ஆண்டுகள் நிறைவாகின்றன. மலையாள நாவல் 1956-ல் வெளியானது. ஐம்பது ஆண்டுகள் கழிந்தும்  நாவல் வாசகர்களை இன்னும் புதிதாய் வசப்படுத்துகிறது. அண்மையில் தான் முதல் முதலாக செம்மீன் நாவலை வாசித்தேன். சுந்தர ராமசாமியின் தமிழாக்கம் அது. இரண்டே நாட்களில் வாசிப்பு வாசிப்பைத் தூண்ட வாசித்து முடித்து விட்டேன். தகழி இந்த  நாவலை இருபது நாட்களுக்குள் எழுதி முடித்து விட்டாராம். ஆச்சரியமில்லை. எழுதும் போது எழுதுவதே எழுதுவதைத் தூண்டி அவர் இந்த நாவலை முடித்திருக்க வேண்டும். கதை தகழியாயிருக்க வேண்டும். தகழி கதையாகியிருக்க வேண்டும்.
கறுத்தம்மா? என்று அடிவயிற்றிலிருந்து குரலெடுத்து அலறுகிறான் பழனி. சூறைக் காற்றில் உக்கிரம் கொண்டிருக்கும் ஆழ்கடல் தோணியிலிருந்து  அவன் அலறல் எதற்கு? கடலுக்குச் செல்லுகிற கணவனின் உயிர் கரையில் இருக்கும் மனைவியிடம் தான் இருக்கிறது. கடற்கரை மீனவர்கள் நம்பும் தொன்மம் இது. ’தன் கறுத்தம்மா தவம் காத்திருப்பாள்; தன் உயிர்க் கயிற்றைப் பிடித்திழுத்துக் கரை சேர்த்து விடுவாள்’ என்று பழனியின் அலறல் வீறிடுகிறது; விண்ணப்பிக்கிறது கறுத்தம்மாவோ தன் பரீக்குட்டியைத் தழுவிக் காதலில் தோய்ந்திருக்கிறாள் கரையில். தோணியை ஆழ்கடலில் இழுத்துச் சென்று கொண்டே இருக்கும் சுறா மீனோடும் சூழும் அலை அரவங்களில் சீறும் கடலோடும் போராடும் பழனியை ஒரு ராட்சஸ அலை முறியடித்து மூழ்கடித்துப் போகிறது. ஆரத் தழுவிக் கொண்டு இரு உடல்கள்- கறுத்தம்மாவும், பரீக் குட்டியும்- கரையில் ஒதுங்கின. கறுத்தம்மவின் பெண் குழந்தை ‘ அம்மா; அப்பா’ என்று அனாதையாய் அலறியபடி அழுது  கொண்டிருந்தது. தூண்டிலை விழுங்கி விட்ட சுறா மீனும் அடுத்த ஊரில் கடற்கரையில் ஒதுங்கியது.
மேற் சொன்னது தகழியின் ‘செம்மீன்” நாவலின் இறுதிப் பகுதியின் சுருக்கம். கதையின் முடிவின் உருக்கமும் வெறுமையும் கடல் போல் பரந்திருக்கிறது. மீனவர்களின் வாழ்க்கையின் எளிமை போல் நெத்தியில் அடிக்கிறது. எப்படி மனித வாழ்வு பல்வித உணர்வுகளில் அலைக்கழிக்கப்படுகிறது? அந்த அலைக்கழிப்புகள் கடல் அலைகள் போல் இல்லையா?  நில்லாத கடல் அலைகளோடு  தங்கள் வாழ்க்கையை இணைத்துக் கொள்ளும் மீனவர்களின் வாழ்க்கையின் நிச்சயமென்ன? அதன் உண்மையென்ன? பெண்கள் மேலான கற்பு நிலையில் அது கட்டமைக்கப்பட்டு விடுமா? அது ஆணாதிக்கமா இல்லையா என்றெல்லாம் விவாதிக்கலாம். அது சரியா தவறா என்று வாதிக்கலாம். மனத்தின் அலைக்கழிப்புகளில், வாழ்க்கை மதிப்பீடுகளை வெல்லும் உருக்கங்களை அடைகிறது.  ஆழ் கடலில் ராட்சஸ மீன் இழுத்துப் போனது போல் தான் கறுத்தம்மா மேலான சந்தேகம் பழனியை இழுத்துப் போனது; ஒருவனுக்கு மனைவியாகியும், ஒரு குழந்தைக்குத் தாயாகியும் கடலில் துள்ளி விளையாடும் செம்மீனாக கறுத்தம்மாவால் இருக்க முடியவில்லை. பால்ய காதலை மறக்க முடியாமல், கடற்கரையில் பாடிக் கொண்டே இருக்கும் தன் பரீக்குட்டி மேல் தான் அவளுக்கு   ஆசை. கடலை  விட்டுக் கரையில் துள்ளிச் சாகும் செம்மீனாய் அவனோடு சாவில் வாழ்க்கையை இணைத்துக் கொள்கிறாள் கறுத்தம்மா. நாவலின் ஈர்ப்பும் உயிர்ப்பும் இந்த சோக முடிவிலா? அதுவும் சமூகம் கட்டமைத்த  வாழ்க்கையை மீறிக் கண்டடையும் காதலில் கறுத்தம்மா என்ற ஒரு பெண்ணை முன்னிறுத்துவதாலா? அவள் சமூகம் நம்பும் ஒரு தொன்மத்தை மீறிக் கடலுக்கு மாசு கற்பித்து விட்டால் என்பதாலா? அது மாசு தானா? இதற்கு முன்னால் யாரும் கடலுக்கு இப்படிப்பட்ட மாசு கற்பிக்கவில்லையா? இது கறுத்தம்மாவே கேட்டுக் கொண்டிருந்த கேள்வி தானே. ஒரு முஸ்லீம் வியாபாரியைக் காதலித்தது தவறா? காதலித்ததால் அவள் கெட்டுப் போனவள் ஆகி விடுவாளா? அப்படித் தானென்று சமூகத்தின் அவநம்பிக்கை அவள் எங்கு சென்றாலும் துரத்தியதே. பிறந்த ஊரை விட்டு கணவன் ஊருக்குச் சென்ற பின்னாலாவது அலர் இல்லாது போகும் என்றால் போகவில்லையே? தனது சுதந்திர உணர்வுகளுக்கும் சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் இடையிலான முரணில் அகப்பட்ட கறுத்தம்மாவுக்கு, கட்டிய கணவனுக்காய் தவம் காக்க முடியாது கடலில் சென்ற கணவனும் திரும்பி வாரானென்றாக ,விரும்பியவனோடு வாழ்க்கையை  முடித்துக் கொள்வது தான் முரணிலிருந்து தப்பும் வழியா? அது சரி தானா? வாழ்க்கையின் போக்குகளை நாவல் உள்ளது உள்ளபடியே படம் பிடிக்கும் போது மேற்சொன்ன கேள்விகளையும் நம்முள் எழுப்பிச் செல்கிறது.  ஆனால் இந்தக் கேள்விகளுக்குத் திட்டவட்டமான பதில்களில் நாவல் உறைந்து விடவில்லை. எப்படி வாழ்க்கை நதியை அறிவார்த்தமான தர்க்கங்களில் உறைய வைக்க முடியும்?
எப்படி கடலலைகள் போல் வாழ்க்கையில் நிகழ்வுகள் புரண்டு புரண்டு வருகின்றன? அதனால் எப்படி மனிதர்கள் நிலை மாறி மாறிப் போகிறது?     தோணியும் வலையும் இல்லாமல் இருந்த செம்பன் குஞ்சு தோணியும் வலையும் சொந்தமாய் வாங்கி  ஒரு பிரமுகனாகிறான்.  கடைசியில் மிஞ்சியது என்ன? மனைவி இல்லை; குழந்தைகள் இல்லை; தோணியும் வலையும் இல்லை. பைத்தியமாகிப் போகிறான். பரீக்குட்டி செம்பன் குஞ்சுவுக்குப் பணம் கொடுத்து வியாபாரமும் அழிந்து ஒன்றுமில்லாமல் உருக்குலைந்து போய் விட்டான். அனாதையான பழனி, கறுத்தம்மாவைக் கைப்பிடித்த பின்னாலாவது ஒரு பிடிப்பிருக்கும் என நினைத்தான். ஆனால் ஊர் கறுத்தம்மவின் பழைய கதையை அவன் பின்னால் பேசப் பேச அந்தப் பிடிப்பும் கை கூடவில்லை. சக மீனவர்களும் அவனைக் கடல் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளாமல் கைவிட தன்னந்தனியனாய்க் கடலில் மீன் பிடிக்கப் போகும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். கடைசியில் வாழ்க்கையில் மிஞ்சுவது என்ன? தனிமையும் வெறுமையும் தாமா? தகழியின் நாவலின் ஈர்ப்பும் உயிர்ப்பும் இந்த அடிப்படைக் கேள்விகளில் நிலை கொண்டுள்ளது.
நாவல்  நமக்கே தெரியாது நம்முள்ளிருக்கும் வஞ்ககங்களையும், நல்லெண்ணங்களையும் துல்லியமாக்குகிறது. பரீக்குட்டியின் பணத்தில் தோணியும் வலையும் வாங்கினாலும், செம்பன் குஞ்சுவுக்கு பரீக்குட்டிக்கு வியாபாரத்திற்கு மீன்களைத் தர வேண்டும் என்ற நினைப்பே இல்லை. பணம் பிரதானமாகிறது. அவனுக்கு பரீக்குட்டிக்குத் தர வேண்டிய கடன் குறித்து அக்கறையே இல்லை. கறுத்தம்மாவுக்கு கடனைத் திருப்பித் தர வேண்டும் என்ற மன அரிப்பு அவனைக் காதலிப்பதால் என்பதை விட, பெற்ற கடனைத் திருப்பித் தர வேண்டும் என்ற அற நிலைப்பாட்டில் வேரூன்றி இருக்கிறது. இதற்கு மாறாய், பரீக்குட்டியின் கறுத்தம்மா மேலான காதலிலில்  ஒரு சுயநலச் சாயல் இல்லாமல் இல்லை. அவன் கறுத்தம்மாவின் தந்தை செம்பன் குஞ்சுவுக்கு கடனுக்குத் தரவில்லையென்று உதவியதிலும் கறுத்தம்மா மேல் காதலால் என்பதை செம்பன் குஞ்சு அவனைக் குற்றம் சாட்டும் போது அவன் மெளனமாயிருக்கிறான். அவன் அப்பாவி என்பதால் உண்மையாகவே கூட உதவியிருக்கலாம். ஆனாலும் கறுத்தம்மாவைக் காதலித்ததால் அவன் செய்த உதவி மேல் கருநிழல் படர்கிறகிறதா? அது அவன் குற்றமா? செம்பன் குஞ்சுவுக்குப் பணம் சேர்ந்ததும், வயதாகியும் இன்ப சுகம் காணும் விழைச்சு ஏற்படுகிறதே. அது அவனது மனைவி சக்கியின் மரணத்துக்குப் பின் இன்னொருத்தியை மணந்து நிறைவேறி, இறுதியில் அல்லலாகிப் புதிதாய் மணந்தவளையே வீட்டை விட்டு விரட்டி விடும் அவலத்தில் முடிகிறது. இப்படி மனதின் சந்து பொந்துகளில் அரவங்களென உறங்கிக் கிடக்கும் உணர்வுகளையெல்லாம் நாவல் எதார்த்தமாய்க் கையாள்கிறது. கிடைத்து விரும்பாத பழனியோடான  வாழ்வுக்கும், விரும்பி பரீக்குட்டியோடு கிடைக்காது போன வாழ்வுக்கும் இடையில் அகப்பட்டுத் தத்தளிக்கும் கறுத்தம்மாவின் மனவோட்டங்களைக் நுணுக்கமாய் சித்தரிக்கிறது நாவல். சின்ன வயதிலிருந்து நேசித்த கடற்கரையிலிருந்து பிரிய நேரும் கறுத்தம்மாவுக்கு கடற்கரையில் கிடக்கும் தோணியின் மறைவுக்கும் சென்று பார்த்துப் பிரிய வேண்டியிருக்கிறது. கட்டிய கணவனின் பக்கத்தில் படுத்திருந்து பரீக்குட்டியை நினைத்துக் கொண்டு ‘எனக்கு அவனிடம் ஆசை தான்’ என்று முணுமுணுக்க, ஆசை என்று கேட்ட கணவன் யாரிடம் என்று கேட்கும் போது ‘உன்னிடம்’ என்று கறுத்தம்மா பச்சைப் பொய் சொல்ல வேண்டியிருக்கிறது.
நாவல் கேரளக் கடற்கரை வாழ் மீனவர்களின் வாழ்க்கையைச் சுற்றிப் பிண்ணப்பட்டிருப்பதால் அவர்களின் சமூக அமைப்புகள், பிரிவுகள், கட்டுப்பாடுகள், நம்பிக்கைகள்  என்ற பன்முக தளங்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் அலைக்கழிக்கும் பேராசை, கோபதாபம், பொறாமை,சந்தேகம், விரக்தி, வீர்யம், சோகம், நேசம்  என்ற பல்விதமான உணர்வுகளில் குழைத்துக் குழைத்துச் சொற்சித்திரம் தீட்டி நாவல் நகரும் போது வாழ்க்கையின்  இருண்மை, வெறுமை  என்ற அடிப்படையான கேள்விகளையும் எழுப்பிக் கொண்டே நகர்கிறது. இது தான் தகழியின் இந்த நாவலின் மகத்தான வெற்றி. கறுத்தம்மாவும் பரீக்குட்டியும் விரும்பிய வாழ்க்கை அவர்களுக்கு அமையவில்லை.  பழனிக்கு அவன் விரும்பிய வாழ்வு அமையவில்லை. செம்பன்குஞ்சு புதிதாய்க் கட்டியவளோடு விரும்பிய வாழ்க்கை விரும்பியது  போல் அமையவில்லை. இது தான் வாழ்க்கையின் புரியாத புதிர். எப்போதும் வேறு விதமாய் வாழ்க்கை அமைந்திருக்கலாம் தான். ஆனால் வாழ்க்கையில் வைக்கும் ஒவ்வொரு எட்டும், அடுத்த எட்டை நிச்சயிக்கும் போது எப்படி வாழ்க்கையை விரும்பியபடி முதலிலிருந்து மறுபடியும் ஆரம்பிப்பது? வாழ்க்கை ஒரு சங்கிலி. அது தனிப்பட்டது இல்லையே. கிடைத்து விரும்பாத பழனியோடான கறுத்தம்மா வாழ்க்கை, விரும்பும் பரீக்குட்டியோடான கிடைக்காத வாழ்வோடு சம்பந்தப்பட்டுள்ளது. ஒரு வேளை வாழ்க்கையை முடித்துக் கொள்ளாமல் பரீக்குட்டியோடு  கறுத்தம்மா வாழ்க்கையை அமைத்திருந்தால் கூட, பழனியோடான வாழ்க்கையின் நிழல் வீழாமல் விரும்பும்படியாய் இருந்திருக்குமா? அதற்காக வாழ்க்கையின் பின்னிய சிக்கலைத் தீர்க்க கறுத்தம்மா பரீக்குட்டி போல் வாழ்க்கையை முடித்துக் கொள்வது விடுதலையா? வாழ்க்கையின் இருண்மையும் வெறுமையும் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வெவ்வேறு தளங்களில் படர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அது எப்படி கறுத்தம்மாவின் வாழ்க்கையில் பரீக்குட்டியின் நிழல் படர்ந்து கொண்டே இருந்ததோ அது போல் தான். ஒவ்வொருவருக்கும் ஒரு விரும்பிய வாழ்க்கை ஒரு கனவாய் மனத்தின் எங்கோ ஒரு மூலையில் இருக்கத் தான் செய்கிறது. ஒரு ஜென் கவிஞன் சொல்வான்:
நான்
நிஜத்தை நிஜமென்று
ஒப்புக் கொள்ள முடியாது.
பிறகு எப்படி
ஒரு கனவை ஒரு கனவென்று
ஒப்புக் கொள்வது?
(I cannot accept
the real as real;
Then how do I accept
a dream as a dream)
கறுத்தம்மவின் சாவு இந்த வரிகளில் உயிர் பெறுகிறதா?
தகழியின் நாவலில் வாசிக்கும் போது எழும் இவை போன்ற  எண்ணங்களில் தாம் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னும்  ’செம்மீன்’ வாசிப்பு  இன்னும் புதிதாய் இருக்கும் இரகசியமும், இனியும் புதிதாய் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் மனத்தில் பதிவாகிறது.

Tuesday, July 10, 2012

Our nftetn.org Server is fault.. so we place this item in this site



Kindly Ignore

A News has been spread throughout Tamilnadu that the Circle Secretary of Chennai has invoked the name of our Tamilnadu Circle Secretary in their meeting held on 6th July’12 questioning the placing of Com A B Bardhan’s TU Lecture Notes in TN website and abused our Circle Secretary by calling Caste aspersion as Parppann (a derogatory term for Brahmin). Comrades started enquiring the said / alleged affair.

One of our Senior Comrade (Outside Chennai and Tamilnadu Circle), hearing the same verified the veracity of that affair. With great organizational interest, Our Senior Comrade voluntarily conveyed to Tamilnadu Circle Secretary that Chennai Circle secretary denied any such speech /such meeting.

Moreover, whenever TN CS and Chennai CS share joint platform, no disrespect was shown by each other and even if any differences, both expressed the same in a dignified way only.

As far as TN CS is concerned, he acts only on issue basis in TU related matters and never acts on the basis of whims and fancies or on the basis of fear or favour.

No more enquiry on this matter is solicited.
                                                                                     11-7-12

Monday, July 9, 2012


 வாழ்வியலின் நடப்பியல் கவிதை.

“என் ரத்தங்களே

அவர்கள்

என்னை எதிரியாக கொண்டாடிய போதும்

இவன் எறும்புகளுக்குக் கூட

குறிவைத்ததில்லை”


ஒரு பொழுதும் சம்மதிக்காத
பாம்பு வெளிக்குச் செல்லும் என் தனிமை
கனத்து வருகிற இருள்
மிடறுகளை நக்கி
என்னை கவ்விக் கிடக்கிற காற்று
ஆகாய அளவில் தேடலும் வேட்கையுமாக
நுரைத்துப் பொஙகிய கடன்
இப்படித்தான் அலைந்து கொண்டிருக்கிறது நான்.

நான்

உன்மொழி பேசுகிறேன் என்றும்

அவன் இன்னொறு மொழி

பேசுகிறான் என்றும்

நம் முனைப்பின் சாலையை

நீட்டிக் கொண்டு

எதிரெதிர் திசைகளில் நடக்கயில்

ஒவ்வொறு முறையும்

இழப்புக்கள் மேலதிகமாகலாம்.



யாரும் இல்லாத

அரச மரத்தில் காவலுக்கு நின்;றன

சில வெளவால்கள்.


வறண்டு கிடக்கும் ஆற்றில்

கரை புரண்டோடும்

வெயில் வெள்ளம்.

மேலே பறந்து கொண்டிருக்கும்

தனித்தொரு பறவை

வானில் ஒரு

குளிர்மேகம் தேடி.

52

செடியின்

ஒரு மலர்

உதிரும்.

ஒரு மொட்டு

அவிழும்.

செடி செடியாய் இருக்கும்.

53

ஒரு

கோவணம் கூட இல்லை.

அண்ணாந்து

ஆகாயம் போர்த்திக்

கொள்ளும்

அந்தக் குழந்தை.

54

நேற்றிரவில்

எனக்குப் பெய்த மழை

எல்லோருக்கும் பெய்யவில்லை.

என் கனவில்

மழை.

55

ஒற்றைப் பனைத்தூரிகையும்

ஓவியமும்

ஒன்றோ?

56

நடுஜாமத்தில் தனிமையில்

செல்லும்

சந்திரனைப் பார்த்து

சங்கிலியில் கட்டிய நாய்

குரைத்தே ’பிடித்து’ விடலாமென்று

குரைத்துத் தீர்க்கும்.

57

ஐஸ்கிரீமாய்

என் காலம் கரையும்.

கடைசியில் மிஞ்சும்

பெயரழிந்து ஒரு

குச்சி.

58

தீராது மழை

கடைசி

மழைச்சொட்டு

தீராத வரை.

59

செருப்பு தைப்பவன்

சுடும் வெயிலில்

குடை நிழலில்

செருப்பு தைப்பான்

சூரியனுக்கு.

60

வெயில் மேல்

வெயில் எரியும்.

’வெளி’ ஏரியில்

நிரம்பி வழியும்

வெப்பம்.

தகித்து மிதக்கும்

தாங்காது உலகம்.

61

காலம் போடும்

கடைசிச் சித்திரம்.

காடு போன பறவை

கூடு திரும்பவில்லை.

62

கடல் மணலில்

செத்துக் கிடக்கும்

இராட்சத மீன்

கடலுக்குள் புகுந்ததும்

துள்ளிக் குதிக்கும்.

கட்டுமரம் தான்.

63

காற்றில்

கலந்திருக்கும் இராகத்தை

ஒரு பறவையின் அலகு

பிரித்துப் பிரித்துப் பாட

’கீச் கீச்’சென்று கேட்கும்.

64

கண் துயிலா

இரவின்

முடிவில்

கனவாய்ப்

புலரும்

காலை.

65

கடலின்

சப்தத்தில்

என்

நிசப்தம்

கூடும்.

66

கத்திரி வெயில்.

என்

‘நிழல்’

எரியும்.

என் ’பட்டை’

உரியும்.

67
ஓசைப்படாமல்
காலப் பாம்பு
உரித்துப் போடும்
என் ’சட்டையை’
ஒவ்வொரு நாளும்.

68

மண்ணில்

முத்து வைக்கும்.

மழைத் துளிகள்.

அதற்குள்

மனசுக்குள்

அடிக்கும்

இடி, மின்னல்

மழை.

69

பூங்காவில்

அது ஒன்று தான்

பட்டமரம்.

வேறென்ன செய்யும்?

வெறுங் கைகளை விரித்துப்

புலம்பும்.

70
கண்ணாடி முன்
என்
உடலைப் பார்ப்பது
நான்.
என்
எலும்புக் கூட்டைப்
பார்ப்பது
காலம்.

71
சின்னச் சின்ன
எறும்புகள்
என்னை
எங்கே
இழுத்துச்
செல்கின்றன?

72

மனிதனின்

கிஞ்சிற்றும் ’ஈரமேயில்லாத’

ஒரு

கண்ணீர்த் துளி

மண்ணில் விழாது உறைந்து

தூக்குக் கயிறாய்த்

தொங்கும்.

73
வானவில்லைக்
கண்கள்
’உடைக்காமல்’
இரசித்தேன்.

74

உனக்கும் தெரியாமல்

உன் ’பொட்டலம்’

அவிழும்.

ஜாக்கிரதை.
உண்மையாய் இரு

75
குடையின்
மேல்
என்
கூடவே வரும்
நிழல் தந்து
வெயில்.

76
துழாவினேன்
துழாவினேன்
அறையுள்.
என்னை விட்டால்
எல்லாம் மிச்சம்.

77
காணாத
’இந்த’ மூச்சிலா
’இந்தப் பிரேதம்’
கனக்காது காண்பதாய்
’என்’ தேகமென்று
என் காலம் செல்லும்?

78
கடல் பக்கம்
கடற்கரை மணல்
சுடும்.
கடற்கரை மணலில் சுடும்
என்
காலடிச் சூரியனைக்
கடலில் கரைப்பேன்.

79
இறக்கைகளின் கீழ்
தங்கியிருக்கும்
’கொஞ்சம் ஆகாயம்’
மேல்
தங்கியிருக்கும்
பறவை
பறக்காத சமயங்களில்.

80

குழந்தைகளே!

படியுங்கள்; படியுங்கள்.

இறக்கைகள் இழந்த

பட்டாம் பூச்சிகள்

பறப்பதைக்

கனவு காணும் காலம் இது.

81
பலியிடப்பட்ட
ஆட்டுத் தலையின்
இறந்த கண்கள்
ஆயிரம் கேள்விகள்
கேட்கும்
’கிடா’ கேட்ட
கடவுளைத் தேடி.

82
தவற விட்டேன்
தனிமையில்
என்னை.
கண்ணாடியாய்
உடைந்து கிடப்பேன்.

83
வெளியின் ஜன்னலிலா?
வீட்டின் ஜன்னலிலா?
காகம்
ஜன்னலில் அமர்ந்து
கத்திக் கொண்டே இருக்கும்.

84
எந்த மேகத்திற்கு
என்னை அழைத்துச் செல்லும்
என் வசமில்லாது
அலையும் மனம்?

85

’அறுபது வருடக் குளம்’

என்று

என்னுள் எட்டிப் பார்த்தால்

வறண்டு கிடப்பேன்

நான்.

86
எதை விட்டேன்
எதை விட?

87

பறவை

பறந்து

விட்டுச் சென்ற ஆகாயம்

ஒரு விநாடி

வெறிச்சென்று தானிருக்கும்.

88
ஒரு

நட்சத்திரத்தைச் சுட்டும்

என் விரல்.

எந்த நட்சத்திரம் என்று

எல்லா நட்சத்திரங்களும்

என் விரல் சேரும்.

89

பயமாய் இருக்கும்

புலி.

பயமாய் இருக்காது

காடு.

90

கடைசியில் தெரியும்

மனிதன்

’நடக்கும் மரமென்று’.

’உயிர்ப்’ பறவை

பறந்து போக

உடல் விழும் மரம் போல.

91

திரிந்து பார்.

சேர்த்த சுமை

தெரியும்.

92

அமைதி கெட்ட

உலகம்.

அலைந்து திரியும்

ஊரில் நாய்கள்.

93

இந்தக் கரையிலேயே

இருப்பேன்.

என்னுள்

வறண்டிருக்கும் ஒரு ஆறு.

எப்போது வெள்ளம் வரும்

அந்தக் கரைக்கு நீந்த.

94

ஒரு விநாடியில்

ஒரு விநாடியில் தான்

ஓடிக் கொண்டிருப்பேன்.

எப்படி

எனக்கு நரைத்தது?

95

ஐந்து நிமிடம்

பெய்த மழையில்

எத்தனை மழைத்துளிகள்?

யோசிக்காமல்

நனைந்தால் நல்லது.

96

எது பூக்கும்?

எத்தனை பூக்கும்?

எது உதிரும்?

எத்தனை உதிரும்?

செடிக்கே கவலையில்லை..

தோட்டக்காரனுக்கு
ஏன் கவலை?

97

மனம் திறப்பது

ஒரு விநாடி கூட இல்லை.

கொடுத்து விடு

அதற்குள்.

98

மரம் நிம்மதியாயிருக்கும்

இலைகளையெல்லாம்

உதிர்த்து விட்டு.

என் மனம் வெறிக்கும்

அதைப் பார்த்து.

99

நிலாவுக்கு

நிலா மட்டும் தான்.

என்னைப் போல்

அனாதையா

நிலா?

100

புத்தர் குதிரையல்ல

நீ சவாரி செய்ய.

நீ தான் குதிரை.

குதிரை தான் புத்தர்.

                                              courtesy thinnai