அனைவருக்கும் வணக்கம்
மாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது

Wednesday, April 28, 2010

வேலைநிறுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றும் வகையில் இரு பிரச்சனைகளில் முன்னேற்றகரமான வேலைகள் நடக்க துவங்கியுள்ளன என அறிகிறோம். ஊதிய பிரச்சனையில் டி ஓ டி தனது கடமையை விரைவில் முடிக்கும் என்ற உறுதிமொழியை பெற்றுள்ளோம். 1 கோடி விரிவாக்க ஆயத்த வேலைகள் துவங்கியுள்ளன. பென்ஷனில் ஜேஏசி கவனமாக இருப்பது நல்லது. கூட்டாக குறிப்பொன்றை தருவது பாதுகாப்பானது.

Monday, April 26, 2010

Staff Norms

அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கைக்கான பணிஅளவீடுகளை தலைமை நிர்வாகம் ஏப்ரல்23 அன்று வெளியிட்டுள்ளது. மே7க்குள் மாநிலங்கள் கணக்கீடுகளை செய்து அனுப்பிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட் செயலர்கள் தங்கள் மாவட்டத்தில் கணக்கீடுகள் நடந்ததா - புதிய கணக்கீட்டின்படி உபரி வருகிறதா -எவ்வளவு என்பதை அறிந்து தெரிவிக்கவேண்டுகிறோம்.

வி ஆர் எஸ் க்கான போராட்டத்தில் ஒன்றாக நின்ற தொழிற்சங்க தலைமை அளவீடுகள் குறித்து பரிசீலித்து தங்களது எதிர்வினையை ஆற்றவேண்டிய கடமையில் உள்ளது. ஜே யே சி உடனடியாக கூடி போராட்ட உறுதிமொழிகள் குறித்தும் Staff Norms குறித்தும் கவனம் செலுத்தவேண்டுகிறோம். த்மிழகத்தில் அளவீடுகள் குறித்து நிர்வாகத்துடன் பேசவிருக்கிறோம்

Friday, April 23, 2010

துவங்கி முடிந்த வேலைநிறுத்தம் குறித்த விளக்கத்தை தோழர்கள் நிதானமாக படித்து புரிந்து கொள்ள வேண்டுகிறோம். கொள்முதல் கவுன்சில் ஆலோசனை சொல்லப்பட்டுள்ளது. அனைவரும் அதன் முக்கியத்துவத்தை உண்ர்ந்தால் மட்டுமே நடைமுறை படுத்தமுடியும். பென்ஷனுக்கு ஒரே குறிப்பு என்ற வேண்டுகோளை தலைவர்கள் செவிமடுப்பார்களா?

Monday, April 19, 2010

வேலைநிறுத்தம் துவங்கியுள்ளது. வாழ்த்துகள்..20-4-10 காலை அமைச்சர் மீண்டும் பேச அழைத்துள்ளார். முடிவுகள் நம்பிக்கை தரும் வகையில் அமைந்தால் தவிர வேலைநிறுத்தத்தை விலக்கி கொள்ள வாய்ப்பில்லை என்றே தலைவர்கள் கருதுகின்றனர். ஒன்றுபட்ட போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம்..

Saturday, April 17, 2010

வேலைநிறுத்தம் பேச்சுவார்த்தை

தலைவர்கள் வேலைநிறுத்தகோரிக்கைகளை தொடர்ந்து விவாதித்து வருகின்றனர்.ஏப்ரல் 1 அன்று DOT செயலரிடமும், ஏப்ரல் 16 அன்று அமைச்சரிடமும் விவாதித்துள்ளனர். DOT செயலர் கூட்டக்குறிப்பு உறுதிமொழி எதையும் தரவில்லை.அமைச்சர் கூட்டக்குறிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
VRS, பங்குவிற்பனை பிரச்சனைகள் அமைச்சர்கள் குழு மட்டத்தில் விவாதப் பொருளாகிறது. பின்னர்தான் முடிவு எடுக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. ITS, பென்ஷன் பிரச்சனை தீர்விற்கு 3 மாதம் அவகாசம் தேவைப்படுகிறது என சொல்கிறார்கள்.

டெண்டர் விவகாரத்தில் 93 மில்லியன் முடிந்த கதையாக தெரிகிறது. Managed Capacity என்கிற MNCகளுக்கு ஆதரவான முறைக்கு முயற்சிகள் நடைபெறுகிறது. Unbundling பிரச்சனையில் அரசு முடிவெடுப்பதற்குள் BSNL அனைத்து cableகளையும் பயன்படுதிக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நிலைமைகளை பரிசீலித்து முடிவெடுத்திட தலைவர்கள் 19-4-10 காலை கூடவிருக்கின்றனர்.

Friday, April 16, 2010

அமைச்சருடன் சந்திப்பு

அனைத்து சங்கத் தலைவர்களும் போராட்ட கோரிக்கைகள் குறித்து அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் விவாதித்துள்ளனர். விவாத குறிப்பு கிடைத்தவுடன் JAC கூடவிருக்கிறது