அனைவருக்கும் வணக்கம்
மாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது

Monday, March 7, 2011

GPF பிரச்சனை

GPF பிரச்சனை
கடந்த இரு மாதங்களாக GPF எடுப்பதில் ஊழியர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கார்ப்பொரேட் அலுவலகத்தில் GPF நேரடியாக DOTஆல் deal செய்யப்படுகிறது. ஆனால் மாநிலங்களில் BSNL பொறுப்பெடுத்து செய்து வருகிறது. ஊழியர்களிடமிருந்து பெறப்படும் சந்தா, பிற பிடித்தங்களை மாதந்தோறும் 14 ஆம் தேதிக்குள் DOTக்கு மாநில நிர்வாகம் அனுப்பிவிடும். ஊழியர்கள் கோரக்கூடிய GPF முன்பணம் மற்றும் withdrawal க்கான தொகையை கார்ப்பொரேட் அலுவலகத்திலிருந்து பெற்று ஊழியருக்கு பட்டுவாட செய்திடும் நடைமுறை இருந்து வருகிறது. இதற்குரிய தொகையை பின்னர் DOT யிடமிருந்து பெற்று கார்ப்பொரேட் அலுவலகத்திற்கு மாநில நிர்வாகம் அனுப்பி வைக்கவேண்டும்.
இந்த நடைமுறை BSNLன் Cash Flow பிரச்சனை இல்லாதவரை சுமூகமாக போய்க் கொண்டிருந்தது. Cash Flow பிரச்சனையால் கேட்கின்ற GPF தொகையை கார்ப்பொரேட் அலுவலகத்திலிருந்து மாநில நிர்வாகங்களால் பெறமுடியாமல் ஊழியர் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
உதாரணமாக தமிழகத்தில் ஊழியர்களிடமிருந்து பெறப்படும் 22 கோடி அளவிலான தொகையை DOTக்கு கட்டிவிட்டு ஊழியர்களுக்கு சராசரியாக தேவைப்படும் 15 கோடியை மாநில நிர்வாகம் கார்ப்பொரேட் அலுவலகத்திலிருந்து பெறவேண்டும். பிறகு DOTயிடமிருந்து அதைப்பெற்று ஆனால் அங்கிருந்து முழுமையாக பெறமுடியாமல் போவதால் பிரச்சனை உருவாகியுள்ளது. நமது தலைமையை இப்பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டியுள்ளோம். 22 கோடி GPF வரவு 15 கோடி பட்டுவாட மீதி 7 கோடி net மட்டும் DOTக்கு கட்டுகிறோம் என்றநிலை இருந்தால் Cash Flow பிரச்சனை சற்று குறையும். பட்டுவாடா தட்டுப்பாடும் நீங்கும் என கருதுகிறோம். உரிய மட்ட்த்தில் இப்பிரச்சனையை எடுத்து தீர்க்க முயற்சித்து வருகிறோம்
7-3-10

No comments:

Post a Comment