அனைவருக்கும் வணக்கம்
மாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது

Sunday, December 4, 2011

வாசித்த இன்பம்

தனுஷ் பாடிய ஒய் திஸ் கொலைவெறி தங்லீஸ் பாட்டு உலகை பிடித்து ஆட்டிவரும் வேளையில் அதன்மீது Insult to Sensibilities என்ற விமர்சனமும் வந்துள்ளது. தமிழ் பெண்பாற் கவிஞர்களின் தேர்வு அதன் ஆங்கில மொழிபெயர்ப்புடன் தமிழ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதை அறிமுகப்படுத்தி வெங்கட் சாமினாதன் எழுதிய கட்டுரை வந்துள்ளது. சில கவிதை வரிகள் கீசுகீ சென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே அதே இனிய நடையில் ஆங்கிலத்தில்.. Black sparrows in droves Fill the air with ‘keech keech’ chirps Don’t you hear it, stupid girl? ”……………………………………………………………… செட்டிக்கடை வெட்டி வேரு சிவகாசிப் பன்னீரு மதுரைக் கடைச்சக்களத்தி மறக்கப் பொடிபோட்டா குதிரைவாலிக் கருது போல குறிச்ச பொண்ணு நானிருக்கேன் சரவட்டைக் கருதுக்காக சாம வழி போகலாமா?…….” Cuscus grass from Chetty shop Fragrant Sivakasi pannier He forgets in the vile spell Cast by the Madurai slut Here I am so georgeous Like lush paddy sheaf And I’am the girl anointed too; In search of measely stalk Should you scurry so far. சல்மாவின் கவிதை ஒன்று. அதன் முதல் பத்தியும் கடைசிப் பத்தியும். தன் வழி தவறி அறைக்குள் சிக்கிய பட்டாம்பூச்சி துவக்கிற்று தன் தேடலை …………………… என்றேனும் கதவு திறந்து வழி கிடைக்குமெனில் அது பறந்து தான் போகும் வர்ணங்கள் இல்லையென்றாலும் கூட Losing its way Trapped in the room Starts its search This butterfly One day some day Should door open and way found Sure it would wing its way out Though robbed of its hues. இதே போல திலக பாமா கவிதை ஒன்றின் ஆரம்பமும் இடையில் ஒன்றும்.. நினைவுப் பரணிலிருந்து எழுப்ப முடியவில்லை தூசிக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் வார்த்தைகளை ……………… மூடிய இமைகளுக்குள் உலவும் இருளுக்கு வெள்ளைக் காகிதங்களின் குணம் கவிகதைகளாய் என் நினைவுகளைச் சுமந்து மடி நிரப்பியிருக்கிறது…… Words Buried in a pool of dust I can’t retrieve from the memory’s loft The inky darkness Encased in shut eyelids Assumes White paper’s aspect Films my madi As poems Carrying my memories உமா மகேஸ்வரியின் வெளிவாசல் வழியே சலித்த மதியம் சாக்கடை நீரருந்தும் குருவி உதிர்கிற மென்மையும் உடைபடாக் கடினமும் விசித்திரமாய் முடைந்த மௌனம் The noon Filtered through the front door A sparrow drinking gutter water A silence A strange weave of Softly enveloping tenderness And unrelenting hardness.

1 comment:

  1. BSNL VRS APPROVAL DECISION IN UPCOMING CABINET MEETING ON 29/12/11 ?

    ReplyDelete